Thursday, August 23, 2007

"விலகுகிறேன்" - சோனியா அதிரடி முடிவு!

உள்ளே நுழைந்த சாலமன் எடுத்த எடுப்பிலேயே, ""பிரிக்க முடியாதது என்னவோ..?'' என்று திருவிளையாடல் ஸ்டைலில் ஒரு கேள்வியைக் கேட்டார். உடனே, ""நீங்களும், உளவுத்துறையும்'' என்று நாம் கொடுத்த பதிலில் சட்டென உச்சி குளிர்ந்தவர், ""நீங்கள் சொல்வது உண்மை. ஆனால் இன்னொரு பதிலும் உண்டு. அது இலங்கை ராணுவத்திற்கும் -விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடக்கும் சண்டைதான்'' என்றபடி நியூஸ்களைச் சொல்ல ஆரம்பித்தார்.

""இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும், இடையே கடுமையான சண்டை நடந்து கொண்டிருக்கிறது. இங்கே பழ. நெடுமாறன் போன்றவர்கள், "விடுதலைப் புலிகளுக்கு உணவு எடுத்துச் செல்லப் போகிறோம்' என்று அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கடந்த ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி, கோட்டையில் கொடியேற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றிய முதல்வர் கருணாநிதி, இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றி எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் அன்றைய தினம் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றில் மாநிலத்திற்கு அதிக அதிகாரம் கேட்டுப் போராடிய வரலாறுகள் பற்றி முதல்வரே நடுப்பக்கக் கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். இதன் பின்னணியில் இலங்கையில் உள்ள தமிழ் நேஷனல் பார்ட்டி, (விடுதலைப் புலிகள் ஆதரவு பெற்ற கட்சி) "அதிகாரப் பகிர்வு குறித்து நாங்கள் ஒரு திட்ட முன் வடிவைக் கொடுக்கப் போகிறோம்' என்றும் அறிவித்துள்ளது. இந்தச் சம்பவங்கள் வௌ;வேறு இடங்களில் நிகழ்ந்தாலும், ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவையாகவே காட்சியளிக்கின்றன'' ""விரிவாகச் சொல்லுங்கள்''"

"இலங்கையில் போர் நடைபெற்று வருகிறது. அங்கே அமெரிக்கா போன்ற நாடுகளின் தலையீடு இந்தியாவிற்கு ஆபத்தானது என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் இந்தியா பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வர, ராஜீவ்காந்தி கொலை வழக்கு தடையாக இருக்கிறது. பிரபாகரன், பொட்டு அம்மன் ஆகியோர் மீதுள்ள இந்த வழக்கைக் காட்டியே இந்தியா, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ஒதுங்கி நிற்கிறது என்ற கவலை இந்திய நலன் மீது அக்கறை கொண்ட பலரிடம் இருக்கிறது. ஆகவே இந்தியா விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு அவர்கள் விரும்புகிறார்கள். அதற்கு முன்பு சோனியாவிடமும் தூதுவர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். அப்போது, "ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பல உண்மைகளை மறைத்து விடுதலைப் புலிகளை குற்றம் சாட்டியதால், ராஜீவ்காந்தியின் மனைவியாகிய நீங்கள் இங்கே அதிகார மையத்தில் இருக்கும் வரை, விடுதலைப் புலிகளுடன் அமர்ந்து பேச முடியாத ஒரு தர்மசங்கடமான சூழ்நிலை இந்தியாவுக்கு இருக்கிறது. அதை அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் பயன்படுத்திக்கொண்டு ஈழப் பிரச்சனைக்குள் தலையிடுகின்றன. அதற்கு நீங்கள் இடம் கொடுக்க வேண்டுமா? விடுதலைப் புலிகள் இல்லாமல் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தியாவை ஈடுபட வைக்க என்ன செய்வது?' என்று அந்த தூதுக்குழுவினர் சோனியாவிடம் கேட்டிருக்கிறார்கள்''

"அதற்கு சோனியா என்ன சொன்னாராம்?''

"நானும், எம்.கே நாராயணனும் அந்தப் பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகி நிற்கிறோம். நீங்களும் மற்றைய இந்திய அதிகார அமைப்புகளும் விடுதலைப் புலிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்து வந்து நல்லுறவு கண்டால் எங்களுக்குச் சம்மதமே' என்று கூறியுள்ளாராம் சோனியா. இதைத் தொடர்ந்து இந்தியாவை சேர்ந்த சிலர் ஈழம் வந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் தலைவர்களைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருப்பதாகத் தகவல். விடுதலைப் புலிகளும் பேச்சுவார்த்தைக்கு தாங்கள் தயார் என்பதைத் தெரிவிக்கும் பொருட்டு இந்தியாவின் சில சமிக்ஞைகளைக் கொடுத்துள்ளது. இதன்படி பார்த்தால், இலங்கைத் தமிழர் பிரச்சினையைத் தீர்க்கும் முயற்சியில் இந்தியா முழு வீச்சில் இறங்க வேண்டும் என்பதற்காக சோனியா சிலவேளைகளில் இத்தாலி சென்றுவிடலாம் என்றும் தகவல் கசிந்து வருகிறது''

நன்றி : தமிழன் எக்ஸ்பிரஸ்

முக்கிய குறிப்பு: தமிழன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள இந்தத் தகவல் பற்றிய மேலும் அதிர்ச்சிகரமான செய்திகள் நாளை வெளிவரும்!!!

http://www.webeelam.com/

8 comments:

Anonymous said...

"முக்கிய குறிப்பு: தமிழன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள இந்தத் தகவல் பற்றிய மேலும் அதிர்ச்சிகரமான செய்திகள் நாளை வெளிவரும்!!! "

தவறான தகவல் பதிவு செய்ய மாட்டீர்களே நம்பிக்கையில் தான் இமெயில் தங்களுக்கு அனுப்பப்பட்டது. மேலே கோட் செய்யபட்டதை தற்போது பார்த்த பின் தான் ஏதோ ஒரு காரணத்தால் கட்டுரை மாற்றப்பட்டதை உணர்த்தியது. நன்றி சபேசன். நாளைய கட்டுரையை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.

Anonymous said...

தூக்கத்திலும் இலக்கணப் பிழை இல்லாமல் நல்ல கற்பனைத் திறனுடன் எழுதும் ஆற்றல் எப்படிக் கிடைத்தது?.

ஒரு ஈழத்தமிழன்

Anonymous said...

" இதன்படி பார்த்தால், இலங்கைத் தமிழர் பிரச்சினையைத் தீர்க்கும் முயற்சியில் இந்தியா முழு வீச்சில் இறங்க வேண்டும் என்பதற்காக சோனியா சிலவேளைகளில் இத்தாலி சென்றுவிடலாம் என்றும் தகவல் கசிந்து வருகிறது''


மிக‌ அருமையான‌ க‌ற்ப‌னைவ‌ள‌ம். ப‌க‌ற்க‌ன‌வு என்றாலும் த‌மிழ்ப‌ட‌ங்க‌ள் போல் சொத‌ப்ப‌ல் இல்லாமல், விறுவிறுப்பாக‌ இருக்கின்ற‌து.



பி+கு: இலங்கையில் போடப்படும் குண்டு வீச்சினால் கட்டுரையாளரின் மன நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது தெளிவாகத் தெரிகின்றது. அவர் நலமடைய நாமும் பிரார்த்திப்போம்.


புள்ளிராஜா

Anonymous said...

கேட்பவர்கள் கேனையன்களாக இருக்குமட்டும் ஈழத்துப் பிரச்சனை பற்றிய கற்பனைகள் பல இடங்களில் வரும்

கானா பிரபா said...

வணக்கம் சபேசன்

உங்கள் மற்றைய ஆய்வுகளைப் படித்திருக்கின்றேன். ஆழமான அலசல்களைத் தேவையான நேரத்தில் செய்திருக்கின்றீர்கள்.
ஆனால் இந்தக் கட்டுரையை எடுத்த எடுப்பில் உங்கள் பதிவில் போட்டிருக்கத் தேவையில்லை என்பது கருத்து. புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கின்றேன்

Anonymous said...

ஆசிரியரின் ஆய்வு எனக்கு ஆச்சரியமாக இருக்கு
எங்கள் நாட்டு பிரச்சனைக்காக சோனியாவும் நாராயணனும் இத்தாலிக்கு போய் lodge எடுத்து தங்குவார்களாம்.

மற்றவர்கள் எல்லோரும் சேர்ந்து முதல் வேலையா ஈழதமிழனுக்கு சுதந்திரம் வேண்டி குடுப்பார்களாம். இதை நாங்கள் நம்போணுமாம்?

பலே பலே

மிகுதி கற்பனை காவியமாக நாளை வருமாம்

வெத்து வேட்டு said...

Are Sabeshan's other exclusive reports too like this? cat is out now....

யாரோ - ? said...

எப்படிப்பா இப்படி உங்களால் மட்டும் முடியுது.. சும்மா சூடாக்க நமீதா இல்லாட்டி ஏதாவது சிம்ரன் மேட்டர் போடுங்கப்பா இப்படியெல்லாம் காமெடி பண்ணாதீங்க...