Monday, July 30, 2007
விடுதலைப் புலிகளின் தாக்குதல் - எங்கே? எப்பொழுது?
Tuesday, July 24, 2007
வவுனியாவில் இருவேறு தாக்குதல்கள் - 18 படையினர் பலி!
Monday, July 16, 2007
தமிழக மீனவர்களுக்கு ஆபத்து!
Thursday, July 12, 2007
கிபீர் சுட்டு வீழ்த்தப்பட்டது!
கிழக்கில் மோதிக்கொள்ளும் ஒட்டுக் குழுக்கள்!
Wednesday, July 11, 2007
கடவுளுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!
குடும்பிமலை கைப்பற்றப்பட்டது - சிறிலங்கா அரசு அறிவிப்பு!
Tuesday, July 10, 2007
சிவாஜி புறக்கணிப்பு - தொடரும் விவாதங்கள்!
Friday, July 06, 2007
குடும்பிமலையில் கடும் மோதல்!
மட்டக்களப்பில் குடும்பிமலைப் பகுதியல் (தொப்பிக்கல) விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்காப் படையினருக்கும் இடையில் கடும் மோதல் நடந்து வருகின்றது.
கடந்த இரண்டு மாதங்களாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான குடும்பிமலையை கைப்பற்றுவதற்கு சிறிலங்காப் படைகள் கடும் முயற்சி செய்து வருகின்றன. ஆனால் விடுதலைப் புலிகளின் கடும் எதிர்தாக்குதலால் அந்த முயற்சிகள் நிறைவேறவில்லை.
இன்று அதிகாலை சிறிலங்காப் படைகள் மீண்டும் தமது முன்னகர்வு முயற்சியை ஆரம்பித்துள்ளன. சிறிலங்காப் படையினருக்கு உதவியாக சிறிலங்கா வான்படையின் விமானங்களும் குண்டு வீச்சில் ஈடுபட்டு வருகின்றன.
சிறிலங்கா படையினரின் முன்னகர்வு முயற்சியை எதிர்த்து விடுதலைப் புலிகள் கடும் எதிர்தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
விடுதலைப் புலிகள் நீண்டதூர எறிகணைகளினால் தாக்குதல் நடத்தி வருவதாக சிங்கள படைத் தரப்பு தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சிறிலங்காப் படைகளுக்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு உயரதிகாரி உட்பட ஆறு படையினர் கொல்லப்பட்டும், ஏழு படையினர் காயமடைந்தும் உள்ளனர் என்று சிறிலங்காப் படைத் தரப்பு அறிவித்துள்ளது. ஆயினும் படையினரின் இழப்பு மேலும் அதிகம் என்று தெரியவருகிறது.
சிறிலங்காப் படையினர் குடும்பிமலையில் உள்ள விடுதலைப் புலிகளின் பிரதான முகாமான "பெய்ருட்" முகாமை அடைவதற்கு கடும் முயற்சி செய்து வருகின்றனர். பல நாட்களுக்கு முன்பே விடுதலைப் புலிகளின் பிரதான முகாமை அண்மித்து விட்டதாக படைத் தரப்பு தெரிவித்திருந்தது. ஆனால் இன்று வரை விடுதலைப் புலிகளின் முகாமை படையினரால் நெருங்க முடியவில்லை.
சிறிலங்காப் படையினர் தமது முழு வலுவையும் பிரயோகித்து குறிப்பிட்ட பகுதியைக் கைப்பற்றினாலும், அதுக்கு கிழக்கு நிலவரத்தில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என்றும், விடுதலைப் புலிகள் தமது முகாமை வேறு பகுதிக்கு நகர்த்தி தொடர்ந்தும் கிழக்கில் செயற்படுவார்கள் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
அம்பாறையை சில மாதங்களிற்கு முன்னர் முற்றுமுழுதாக கைப்பற்றி விட்டதாக சிறிலங்காப் படைகள் தெரிவித்திருந்தன. ஆனால் தற்பொழுது மீண்டும் விடுதலைப் புலிகள் அம்பாறையில் சில பகுதிகளில் செயற்படத் தொடங்கி உள்ளனர். கட்டுப்பாட்டுப் பிரதேசங்களையும் கொண்டுள்ளனர்.
ஆகவே ஒரு முகாமைக் கைப்பற்றி சிங்களப் படைகள் வெற்றிவிழாக் கொண்டாடினாலும், உண்மை நிலவரம் வேறு மாதிரியானதாகவே இருக்கும்.
Thursday, July 05, 2007
கரும்புலிகள் - சில சிந்தனைகள்!
ஜுலை 5 - தமிழீழத்தில் கரும்புலிகள் தினம் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்படுகின்ற நாள் இது. முதலாவது கரும்புலித் தாக்குதல் நடைபெற்று இருபது ஆண்டுகள் முடிவுற்றுள்ளன.
தமிழீழ விடுதலைப் போராட்டம் நெருக்கடிகளை சந்திக்கின்ற காலங்களில், அந்த நெருக்கடியில் இருந்து போராட்டத்தை மீட்பவர்கள் பெரும்பாலும் கரும்புலிகளாகவே இருக்கின்றனர்.
ஜுலை 5 1987ஆம் ஆண்டு நெல்லியடியில் முதலாவது கரும்புலித் தாக்குதலை கப்டன் மில்லர் நடத்தினார்.
அன்றைக்கு யாழ் குடா பெரும் நெருக்கடியில் சிக்கியிருந்தது. சிங்களப் படைகள் "ஒபரேசன் லிபரேசன்" நடவடிக்கை மூலம் வடமராட்சியின் பெரும்பகுதியை கைப்பற்றியிருந்தன. வடமராட்சியை கைப்பற்றியிருந்த சிங்களப் படைகள் யாழ்குடாவின் மற்றைய பகுதிகளையும் கைப்பற்றுவதற்கு ஆயத்த நிலையில் இருந்தன. யாழ் குடா மக்களை அச்சம் சூழ்ந்திருந்த காலம் அது.
அவ்வாறான ஒரு நேரத்தில்தான் ஜுலை 5 1987 அன்று விடுதலைப் புலிகள் நெல்லியடியில் அமைந்திருந்த படை முகாம் மீது தாக்குதல் நடத்தினர். அந்தத் தாக்குதலின் போது கப்டன் மில்லர் வெடிமருந்து நிரப்பிய வாகனத்தோடு படைமுகாம் மீது மோதி வெடித்தார். சண்டை முடிவுக்கு வந்தது.
அந்தத் தாக்குதலில் கரும்புலி கப்டன் மில்லரோடு மேலும் மூன்று போராளிகள் வீரச்சாவடைந்தனர். ஏறக்குறைய நூறு சிங்களப் படையினர் பலியாகினர். இந்தத் தாக்குதல் சிங்கள அரசை அதிரச் செய்தது. யாழ் குடாவை கைப்பற்றும் திட்டத்தை கைவிடச் செய்தது.
இரண்டாம் ஈழப் போரின் போது தொலைநோக்கு சிந்தனையோடு வன்னியை துப்பரவு செய்யும் பணியை விடுதலைப் புலிகள் ஆரம்பித்தனர். கொக்காவில், மாங்குளம் போன்று முக்கிய முகாம்கள் கைப்பற்றப்பட்டன.
அப்பொழுது வன்னியின் மிகப் பெரிய தளங்களில் ஒன்றாக மாங்குளம் விளங்கியது. மாங்குள முகாமை கைப்பற்றினால்தான் வன்னியின் மைய்யப்பகுதி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்ற நிலை இருந்தது. இந்த நிலையில் விடுதலைப் புலிகளின் இரண்டாவது கரும்புலித் தாக்குதல் நடந்தது.
நவம்பர் மாதம் 23ஆம் நாள் 1990ஆம் ஆண்டு மாங்குள முகாம் மீது கரும்புலி லெப்.கேணல் போர்க் வெடிமருந்து வாகனத்தை செலுத்தி வீரகாவியமானார். தொடர்ந்து பல நாட்களாக நடந்து வந்த மாங்குளச் சமர் முடிவுக்கு வந்தது. வன்னியின் பெரும்பகுதியும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
தரைக் கரும்புலிகளை அடுத்து கடற் கரும்புலிகளும் தோற்றம் பெற்றனர். சிங்களக் கடற்படைக்கு எதிராக கடற்புலிகள் நடத்திய முதலாவது பெரும் தாக்குதல் கடற்கரும்புலித் தாக்குதலே ஆகும். இதை விட யாழ் குடாவை சிங்களப் படைகளின் இறுக்கமான முற்றுகையில் இருந்து மீட்டு கிளாலிப் பதையை திறந்து வைத்தவர்களும் கடற்கரும்புலிகள்தான்.
வெடிகுண்டு நிரப்பிய ஊர்த்தியோடு சென்று மோதி வெடிக்கின்ற தரை மற்றும் கடற் கரும்புலிகளோடு கொமாண்டோ பாணியிலான அதிரடித் தாக்குதலை நடத்தக்கூடிய கரும்புலிகள் அணிகளையும் விடுதலைப் புலிகள் உருவாக்கினர். இவ்வாறான கரும்புலி அணிகள் எதிரிக்கு மிகப் பெரும் அழிவுகளை ஏற்படுத்திக்கொடுத்தன.
ஓயாத அலைகள் மூன்றில் ஆனையிறவுச் சமரின் போது, ஆனையிறவைச் சுற்றியுள்ள ஆட்லறித் தளங்கள் மீது கரும்புலிகளின் அணிகள் அதிரடித் தாக்குதலை நடத்தி ஆட்லறிகளை அழித்து, ஆனையிறவு கைப்பற்றப்படுவதற்கு உறுதுணையாக இருந்தனர்.
எல்லாவற்றிற்கும் மேலாக கரும்புலிகளின் அதரடித் தாக்குதல் அணி கட்டுநாயக்க விமானத் தளம் மீதான தாக்குதல் சிறிலங்கா அரசையே முற்றுமுழுதாக நிலைகுயை வைத்தது. படைவலுச் சமநிலை ஏற்பட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கும் முக்கிய காரணியாக கட்டுநாயக்க தாக்குதல் அமைந்தது.
தரை மற்றும் கடற் கரும்புலிகளோடு விடுதலைப் புலிகள் வான்கரும்புலிகளையும் உருவாக்குவார்கள் என்ற ஊகம் சில மட்டங்களில் இருந்தது. விடுதலைப் புலிகள் விமானங்களை வைத்திருப்பது தெரிய வந்தபோது, விடுதலைப் புலிகள் விமானங்களைக் கொண்டு தற்கொடைத் தாக்குதல்களையே நடத்துவார்கள் என்று எதிர்வு கூறப்பட்டது.
ஆனால் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை. விடுதலைப் புலிகள் கரும்புலித் தாக்குதல்களுக்கு வான்புலிகளை பயன்படுத்த மாட்டார்கள். ஒரு விமானத்தை பெற்றுக் கொள்வதும், ஒரு விமானியை உருவாக்குவதும் மிகப் பெரும் செலவு பிடிக்கும் விடயங்கள். ஆகவே வான்புலிகளை தற்கொடைத் தாக்குதலுக்கு பயன்படுத்துவதை விடுதலைப் புலிகள் தவிர்த்துக் கொள்ளவே விரும்புவர்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இதுவரை 322 கரும்புலி வீரர்கள் தமது இன்னுயிர்களை தியாகம் செய்துள்ளர். இதில் பெரும்பாலானவர்கள் கடற் கரும்புலிகள் ஆவார்கள்.
கரும்புலிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கை உள்ளவர்கள் முகம் தெரியாமலேயே தம்மை தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஈந்துள்ளார்கள். தியாகங்களில் இது மிகப் பெரிய தியாகம் ஆகும்.
தாய்நாட்டிற்காக தமது உயிரைக் கொடுப்பது என்பதே மிகப் பெரிய தியாகம் ஆகும். அதிலும் சாவு நூறு வீதம் உறுதி என்றும், தன்னுடைய உடல் காற்றோடு காற்றோடு கலந்துவிடும் என்றும் தெரிந்து கொண்டு கரும்புலியாவது என்பது தியாகத்திலும் பெரும் தியாகம் ஆகும்.
இவை எல்லாவற்றையும் விட தமது பெயரைச் சொல்லி ஒரு வீரவணக்கம் கூட வெளிப்படையாக செய்ய முடியாது என்று தெரிந்தும் காற்றோடு கலந்து போவது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அரும் பெரும் தியாகம் ஆகும்.
அமெரிக்காவின் புலனாய்வுப் பிரிவினர் பலர் வெளிநாடுகளில் தமது தாய்நாட்டிற்காக பணியாற்றுகின்ற நேரத்தில் எதிரிகளால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களை அமெரிக்க அரசு பொறுப்பெடுக்க மாட்டாது. பல வேளைகளில் அவர்கள் அமெரிக்கர்கள் என்று கூடத் தெரிய வருவதில்லை. ஏதோ ஒரு தூர தேசத்தில் யாருமற்ற அநாதைப் பிணம் போன்று புதைக்கப்படுவார்கள்.
கொல்லப்பட்டால் முகவரி இன்றி புதைக்கப்படுவோம் என்று தெரிந்தும் இது போன்று பல நாடுகளின் புலனாய்வுத்துறையை சேர்ந்தவர்கள் தாய் நாட்டிற்காக உலகின் பல பாகங்களிலும் பணிபுரிந்து வருகிறார்கள். தாய்நாட்டிற்காக இவர்கள் மிகப் பெரிய தியாகத்தை செய்யத் தயாராக இருக்கிறார்கள்.
இப்படி இன்றைக்கும் சில வேளைகளில் என்றைக்கும் வெளிப்படையாக பெயர் சொல்லி திருவுருவப் படத்திற்கு மாலை போட்டு வீரவணக்கம் செய்ய முடியாதபடி வீரச்சாவடைந்த பல கரும்புலிகள் உண்டு. இவர்கள் தமிழீழ தேசத்தை மிகப் பெரும் அச்சுறுத்தலில் இருந்து காத்தவர்கள்.
கரும்புலிகளின் தாக்குதலை தற்கொலைத் தாக்குதல் என்று பலர் வர்ணித்தாலும், தம்மையே கொடையாகக் கொடுப்பதால் தற்கொடைத் தாக்குதல் என்று சொல்வதே சரியாக இருக்கும்.
தமிழீழப் போராட்டத்தை நெருக்கடிகளில் இருந்து மீட்டவர்களும் மிகப் பெரும் அச்சுறுத்தல்களில் இருந்து காத்தவர்களுமாகிய கரும்புலிகளை ஒரு சர்ச்சைக்குரிய விடயமாகவே மேற்குலக நாடுகள் பார்க்கின்றன.
ஒரு காலத்தில் வியந்து பார்க்கப்பட்ட தற்கொடைத் தாக்குதல்கள் இன்றைக்கு பல நாடுகளினால் அச்சத்தோடு பார்க்கப்படுகின்றன. இதற்கு முக்கிய காரணம் பொதுமக்களை இலக்கு வைத்து அல்கைதா போன்ற தீவிரவாத இயக்கங்கள் நடத்துகின்ற தாக்குதல்கள் ஆகும். பொதுமக்களை இலக்கு வைத்து நடத்தப்படுகின்ற தற்கொடைத் தாக்குதல்கள் அந்தத் தற்கொடைத் தாக்குதலுக்கு ஒரு களங்கத்தை ஏற்படுத்திவிடுகின்றன.
ஆனால் விடுதலைப் புலிகள் பொதுமக்களை இலக்கு வைத்து ஒருபோதும் தற்கொடைத் தாக்குதல்களை நடத்தவதில்லை. பொதுமக்களின் குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ள இலக்குகளை தாக்கும் போது கூட பொதுமக்களின் பாதிப்பை தவிர்ப்பதில் கூடிய கவனம் செலுத்துவார்கள்.
ஆயினும் உலகின் மிக அதிகமான தற்கொடைத் தாக்குதல்களை நடத்தியவர்கள் விடுதலைப் புலிகள் என்பதும் விடுதலைப் புலிகளின் தற்கொடைப் படையணி நவீனமானதும், நெறிப்படுத்தப்பட்டதும், கடும் பயிற்சி பெற்றதும் ஆகும் என்பதும் மேற்குலக நாடுகளுக்கு அச்சத்தையே கொடுக்கின்றன.
விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கப் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு முக்கிய நிபந்தனையாக கரும்புலிகள் அணியை கலைக்க வேண்டும் என்ற நிபந்தனையை அமெரிக்கா முன்வைத்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. தமிழீழ மக்களின் மிகப் பெரும் பலமாக கரும்புலிகள் விளங்குவதாலேயே மேற்குலக நாடுகள் இவ்வாறு நடந்து கொள்கின்றன.
கரும்புலிகள்தான் ஒரு பிரச்சனை என்றால், அது குறித்து மேற்குலக நாடுகள் கவலை கொள்ளத் தேவை இல்லை. இன்றைக்கு விடுதலைப் புலிகள் பெற்றுவருகின்ற படைக்கல வளர்ச்சி உயிராயுதத்திற்கு மாற்றீடாக அமைகின்றது.
தரைச் சண்டைகளில் கரும்புலிகளை பயன்படுத்துவது பெருமளவு குறைந்து போயுள்ளது. கடற்சமர்களில் கடற்கரும்புலிகளின் தாக்குதல் இல்லாமலேயே டோராப் படகுகளை கடற்புலிகள் மூழ்கடிக்கத் தொடங்கி உள்ளார்கள். கொழும்பில் கரும்புலிகளின் அதரடித் தாக்குதல் அணி நடத்த வேண்டிய தாக்குதல்களை வான்புலிகள் நடத்துகின்றனர்.
உயிராயுதத்திற்கு மாற்றீடான படைக்கலங்களை தமிழீழ தேசம் முற்றுமுழதாக பெறுகின்ற போது, தற்கொடைத் தாக்குதல்களை நடத்த வேண்டிய தேவையும் இல்லாது போகும்.
Tuesday, July 03, 2007
மாம்பழக் கதை சொல்கின்ற செய்தி என்ன?
முருகனும் பிள்ளையாரும் மாம்பழத்திற்காக உலகைச் சுற்றிவந்த கதை ஏறக்குறைய அனைவரும் அறிந்த ஒன்று. சைவ சமயப் பாடப் புத்தகங்களில் படித்தோ, வீட்டில் பெரியவர்கள் சொல்லியோ இந்தக் கதையை அறிந்திருப்பார்கள்.
ஒவ்வொரு கதையும் ஏதோ ஒரு செய்தியை சொல்கின்றன. ஒவ்வொரு கதை உருவாக்கப்படுவதற்கும் பலவிதமான காரணங்கள் இருக்கின்றன. கற்பனைக் கதைகள் என்று சொல்லப்பட்டாலும் உண்மையான சம்பவங்களின் அடிப்படையில் இந்தக் கதைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
சிறுவர்களுக்கானவை என்று சொல்லப்படுகின்ற நீதிக் கதைகள், புராணக் கதைகள், உருவகக் கதைகள் தொடங்கி இன்றைய சினிமா வரை அனைத்துமே இந்த வரையறைக்குள் அடங்கும்.
ஒரு முற்றுமுழுதான நூறு வீதமான கற்பனையை செய்ய மனித மூளையால் முடியாது. அவ்வாறு மனிதனுடைய மூளையின் அமைப்பு இல்லை. இதைப் பற்றி பின்பு ஒருமுறை விரிவாகப் பார்க்கலாம்.
புராணக் கதைகளில் வருகின்ற தேவர், அசுரர் ஆகியோர் ஆரியர் மற்றும் திராவிடர்களையே குறிக்கின்றன என்றும் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையிலான போர் ஆரிய திராவிடப் போர்களை குறிக்கின்றன என்றும் பலரால் தர்க்கரீதியாக நிறுவப்பட்டுள்ளது. இராமாயணம் போன்ற கதைகள் யாரைக் குறிக்கின்றன என்பது போன்ற ஆய்வுகளும் பல முறை நடைபெற்றுள்ளன.
அதே வேளை தமிழர்களால் வணங்கப்பட்ட கடவுள்கள் சிலவும் ஆரிய மயப்படுத்தப்பட்டு இந்தப் புராணக் கதைகளுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளன. இந்தக் கடவுள்களை பாத்திரங்களாக கொண்டுள்ள கதைகள் சொல்கின்ற செய்தி என்ன என்கின்ற ஒரு கேள்வி எழுகின்றது.
தமிழர்களால் வணங்கப்பட்ட கடவுள்கள் ஆரியர்களால் இல்லாது செய்யப்பட்டும், பெயர் மாற்றத்தோடு உள்வாங்கப்பட்டும் விட்டன. இந்தக் கடவுள்களுள் முருகன் முக்கியமானவன். ஒரு மன்னனாக இருந்து தமிழர்களை காத்து நின்றவன் என்று நம்பப்படுகின்ற முருகன் கட்டம் கட்டமாக ஆரியமயப்படுத்தப்பட்டான்.
முருகன் என்கின்ற அழகிய தமிழ் பெயரை சுப்ரமண்யன் என்று மாற்றி பின்பு அந்த மன்னனை குழந்தை ஆக்குவதற்கு பாலசுப்ரமண்யன் என்றும் மாற்றிவிட்டார்கள்.
அத்துடன் வளர்ந்த முருகனுக்கு 6 தலைகள் முளைக்கச் செய்தார்கள். 12 கைகளை பூட்டினார்கள். ஒரு காதல் மனைவியோடு வாழ்ந்த முருகனோடு இன்னொரு பெண்ணையும் இணைத்தார்கள். அந்தப் பெண்ணை மனைவியாக்கி உண்மையான மனைவியை வப்பாட்டி ஆக்கினார்கள். முருகனின் பிறப்புக் குறித்து ஆபாசமான அருவருப்பான கதைகளையும் உருவாக்கினார்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக மன்னனாக இருந்தவனின் அண்ணனாக பிற்காலத்தில் வந்த யானைத் தலையுடன் கூடிய ஒரு வினோத உருவத்தை கற்பித்தும் விட்டார்கள்.
முருகனை ஆரிய இந்துமதத்திற்குள் உள்ளடக்குகின்ற வேலை மிகவும் இலகுவாக நடைபெறவில்லை. அதற்கு நீண்ட காலம் எடுத்தது.
உண்மையில் ஆரியர்கள் முருக வழிபாட்டை இல்லாமல் செய்யமுடியாத நிலையிலேயே முருகனை உள்வாங்க முனைந்தார்கள். அவர்களுடைய விருப்பம் என்பது "முருகன்" என்கின்ற ஒன்றை மெதுமெதுவாக இல்லாமல் செய்வதுதான்.
இரண்டு ஆயிரம் ஆண்டுகள் சென்ற பின்னர் அது இன்றைக்கு கைகூடி வருகின்ற நிலையில் உள்ளது. சில பத்து ஆண்டுகளுக்கு முன்னர் கடவுள் நம்பிக்கை உள்ள பல சான்றோர்களைப் பார்த்தால், அவர்களில் பெரும்பாலானவர்கள் முருக பக்தர்களாக இருப்பார்கள். ஒரு காலத்தில் முருகபக்தியை அடிப்படையாகக் கொண்டு நிறைய சினிமாக்களும் வந்தன.
ஆனால் இன்றைக்கு பெரும்பாலானவர்கள் ஐயப்ப பக்தர்களாகவும், ஆஞ்சநேய பக்தர்களாகவும், சாய்பாபா பக்தர்களாகவும்தான் இருக்கிறார்கள். தமிழர்கள் முருகனை மெதுமெதுவாக மறந்துகொண்டு வருகிறார்கள்.
தமிழின எதிரிகளோடு வேலெடுத்து போராடி தமிழர்களை காத்த எங்களின் மன்னவன் முருகன் மேலும் மேலும் தேடப்பட வேண்டியவனும், கண்டுபிடிக்கப்பட வேண்டியவனே தவிர மறக்கப்பட வேண்டியவன் அல்ல.
ஆரம்பத்தில் சொன்னது போன்று ஒவ்வொரு கதையும் ஏதோவொரு செய்தியையும், சம்பவத்தையும் அடிப்படையாக கொண்டவை என்ற அடிப்படையில் முருகன் சம்பந்தமான இரண்டு புராணக் கதைகளை எடுத்துக்காட்டாக பார்க்கின்ற போது சில சிந்தனைகள் வருகின்றன.
தமிழ் கடவுளாகிய முருகன் பிரம்மனிடம் மந்திரத்தின் பொருள் கேட்கின்றான். பதில் சொல்லத் தவறுகின்ற பிரம்மனை தலையில் கொட்டி சிறையில் அடைக்கின்றான். படைத்தல் உட்பட அனைத்து விடயங்களையும் தன்னுடைய பொறுப்பில் எடுத்துக் கொள்கிறான். கடைசியில் பரமசிவன் முருகனைக் கெஞ்சிக் கேட்டதன்படி பிரம்மனை விடுதலை செய்கிறான்.
இந்தக் கதை முருகன் ஆரியர்களை வெற்றிகொண்ட சம்பவத்தின் அடிப்படையில் எழுந்திருக்கும். அதே போன்று முருகனின் கலகம் தோற்றுப் போன கதையையும் புராணம் சொல்கிறது. அதுதான் மாம்பழத்திற்கு உலகத்தை சுற்றி வந்த கதை.
புராணக் கதைகளில் நாரதன் என்கின்ற பாத்திரம் பிரபல்யமானது. அசுரர்கள் என்று சொல்லப்படுபவர்களை உளவு பார்ப்பதும், அவர்களை தவறான பாதையில் திசைதிருப்புவதுமே நாரதன் என்கின்ற பாத்திரத்தின் முக்கிய வேலையாக இருக்கும்.
இந்த நாரதன் என்கின்ற பாத்திரம் தமிழ் கடவுள் முருகன் தோற்கடிக்கப்பட்ட மாம்பழக் கதைகயிலும் முக்கிய இடத்தை வகிக்கின்றது. நாரதன் கொடுத்த மாம்பழத்தினால் பிரச்சனை உருவாகிறது. மாம்பழம் யாருக்கு என்ற பிரச்சனையில் முடிவு காண உலகத்தை சுற்றி வருகின்ற போட்டி வைக்கப்படுகின்றது.
உண்மையான உலகத்தை சுற்றி வந்த முருகன் தோற்றுப் போகிறான். சிவனையும் பார்வதியையும் சுற்றி வந்த கணபதி வெற்றிபெறுகிறான்.
கணபதி தன்னுடைய குடும்பத்தை சுற்றி வந்து குடும்பத்திற்குள்ளேயே நிற்கின்றான். குடும்பத்திற்குள் நிற்பவன் வெற்றி பெறுகிறான். குடும்பத்திற்குள் வர மறுக்கின்ற முருகன் தோற்றுப் போகிறான்.
இங்கே குடும்பம் என்பது ஆரிய இந்துத்துவத்தை குறிக்கின்றது. இந்தக் குடும்பத்திற்குள் அடங்காதவன் தோற்றுப் போவான் என்பதுதான் இந்தக் கதை சொல்கின்ற செய்தி.
கணபதி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதும் முருகன் அதை ஏற்க மறுத்து கலகம் செய்கிறான். தொடர்ந்தும் "குடும்பத்திற்குள்" அடங்க மறுத்து வெளியேறுகிறான். ஆனால் மலைகளிலும் காடுகளிலும் கோவணத்தோடு அலைகின்ற நிலைதான் முருகனுக்கு ஏற்படுகிறது.
மொத்தத்தில் இந்தக் கதை தெளிவான முறையில் சொல்கின்ற செய்தி இதுதான். "ஒழுங்காக ஆரியக் குடும்பத்திற்குள் இருங்கள்! இல்லையேல் கோவணத்துடன்தான் அலைவீர்கள்!"