இனவிடுதலையும் பகுத்தறிவும் எம் இரு கண்கள்
தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த பின்பு நடைபெற்ற போர்களை “ஈழப் போர்” 1, 2, 3 என்று வகைப்படுத்துவார்கள். 80களின் தொடக்கத்தில் ஆரம்பித்து 87 வரை நடைபெற்ற போரை “ஈழப் போர் 1″ என்றும் 90ஆம் ஆண்டில் இருந்த 95ஆம் ஆண்டு வரை நடந்த போரை “ஈழப் போர் 2″ என்றும், 1995ஆம் ஆண்டில் இருந்து 2002 வரை நடந்த போரை “ஈழப் போர் 3″ என்றும் அழைப்பார்கள்.
இடையிலே 1987ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து 1990இன் ஆரம்பம் வரை இந்திய ஆக்கிரமிப்புப் படையுடன் நடந்த போரை “இந்திய - ஈழப் போர்” என்று சொல்வார்கள்.
சிறிலங்காப் படைகளுடன் நடத்துகின்ற போரை “ஈழப் போர் 1,2,3″ என்றும் இந்தியப் படைகளுடன் நடந்த போரை “இந்திய - ஈழப் போர்” என்றும் வேறுபடுத்தி அழைக்கப்படுவதை இதில் இருந்து புரிந்து கொள்ளலாம். தற்பொழுது நடக்கின்ற போரை “ஈழப் போர் 4″ என்று அழைக்கின்றார்கள்.
இந்த இடத்திலே “இந்திய- ஈழப் போர்” ஆரம்பமான பொழுது நடந்த ஒரு சம்பவத்தை குறிப்பிட வேண்டும். அன்றைய காலகட்டத்தில் படையினர் தொலைத்தொடர்புக் கருவிகள் மூலம் பேசுவதை சிறிய வானொலிப் பெட்டிகளில் அலைவரிசைகளை மாற்றி கேட்கக் கூடியதாக இருந்தது. முக்கியமாக உலங்கு வானூர்த்தியில் இருந்து தாக்குதல் நடத்தும் படையினர் பேசுவதை, தாக்குதல் நடத்தப்படும் பகுதியில் உள்ளவர்களால் வானொலியில் தெளிவான முறையில் கேட்க முடிந்தது.................முழுவதையும் படிக்க இங்கே அழுத்துங்கள்
http://www.webeelam.net/