Friday, February 15, 2008

இந்து மதமும் பெண்களும் (பாகம் 6)

புராணங்களை கதைகள் என்று சிலர் சொல்வார்கள். ஆனால் அந்தக் கதைகளின் அடிப்படையில்தான் தமது சடங்குகளையும் விழாக்களையும் இந்துக்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இந்து மதம் என்பது வேதங்கள், சாத்திரங்கள், புராணங்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது. திருமணத்தில் சொல்லப்படும் மந்திரங்கள் ரிக், யதூர் போன்ற வேதங்களில் இருந்து பெறப்பட்டவை. அதன் மூலம் இந்த வேதங்கள் பெண்களை இழிவுபடுத்துவதைக் கண்டோம்.

மனுதர்ம சாத்திரத்தையும் உதாரணம் எடுத்துப் பார்த்தோம். பகவத்கீதையையும் உதாரணத்திற்கு எடுத்தோம். பின்பு ஒரு புராணக் கதையையும் உதாரணத்திற்கு எடுத்தோம். எல்லாமே பெண்களை இழிவுபடுத்துகின்றன. பெண் தாழ்ந்த பிறப்பு என்று சொல்கின்றன. கற்பு அற்றவர்கள் என்கின்றன. தோசம் உள்ளவள் என்கின்றன.

நாம் பார்த்த புராணக் கதையின் படி பெண்ணினுடைய தோசம்தான் மாதவிடாயாக வெளிப்படுகிறது. பெண்கள் மாதவிடாய் காலத்தில் தீட்டு என்று சொல்லி தள்ளி வைப்பதன் காரணம் இதிலிருந்துதான் வந்தது.

பெண்களை மூன்று நாட்களும் தள்ளி வைப்பதற்கு இன்றைக்கு சிலர் அசுத்தம், ஆரோக்கியம், அது, இது என்று விஞ்ஞான விளக்கங்கள் தருவார்கள். ஆனால் அவைகள் உண்மை இல்லை.

மேற்குநாட்டுப் பெண்கள் வீட்டில் தள்ளி இருப்பது இல்லை. அங்கு யாரையும் எந்தக் கிருமியும் பாதிக்கவில்லை. இன்றைக்கு பெண்கள் தமது மாதவிடாய் காலங்களிலும் பல ஆயிரம் பேர் வேலை செய்யும் தொழிற்சாலைகளிற்கு சென்று வேலை செய்கின்றார்கள். அங்கும் யாரையும் எந்தக் கிருமியும் பாதிக்கவில்லை.

ஆனால் இன்றைக்கும் மாதவிடாய் உள்ள ஒரு இந்துப் பெண்ணால் ஒரு கோயிலிற்கு சென்று வழிபட முடியாது. கோயிலில் யாரும் இல்லாத நேரத்தில் கூட போக முடியாது. தீட்டு என்று சொல்லி தடுத்து விடுவார்கள். மாதவிடாய் என்பது பெண்ணினுடைய தோசத்தின் வெளிப்பாடு என்று இந்து மதம் உறுதியாக நம்புவதே இதற்கு காரணம். ஒரு புராணக் கதை வாழ்க்கையில் நடைமுறைப் படுத்தப்படுவதற்கு இது ஒரு உதாரணம்.

புராணங்களை வெறும் கதைகள் என்று தூக்கி எறியாது, அதை உண்மை என்று நம்பி தொடர்ந்தம் அவைகளை இந்து மதம் கடைப்பிடித்து வருவதாலேயே நாமும் அது குறித்து பேச வேண்டி உள்ளது. இந்து மதம் சொல்வதும் செய்வதும் அனைத்தும் பெண்களுக்கு எதிரானதே.

இந்து மதத்தில் பெண்ணை வைத்து ஒரு பிளவு ஏற்பட்டதாக சொல்லியிருந்தேன் அல்லவா? அதை இப்பொழுது பார்ப்போம்.

இந்து மதத்தில் பல பிரிவுகள் இருப்பதாக சொல்வார்கள். அதிலே சைவம், வைணவம் போன்றவைகள் முக்கியமானவை. சைவத்திலும் வீரசைவம், சிந்தாந்த சைவம் என்ற பிரிவுகள் இருக்கின்றன. வைணவத்தில் தென்கலை, வடகலை என்று பிரிவுகள் இருக்கின்றன.

வீரசைவம், சைவசிந்தாந்தம் போன்ற பிரிவுகளுக்கிடையில் பெரியளவில் சச்சரவுகள் நடந்ததாக தெரியவில்லை. ஆனால் வடகலைக்கும் தென்கலைக்கும் நடந்த பிரச்சனைகள் உலகப் பிரசித்தம். இன்றுவரை பல இடங்களில் இவர்களுக்குள் சர்ச்சைகள், பகையுணர்வுகள் உண்டு. ஒரு பிரிவினர் மற்ற பிரிவினருக்குள் திருமணம் செய்து கொள்வது என்பது வெகு வெகு குறைவு.

வடகலை, தென்கலை பிரிவுகளை நாமங்களை வைத்துத்தான் இனம் காண்பார்கள். வடகலையினர் "Y" வடிவத்திலே நாமம் கீறி நடுவில் ஒரு கோடு போடுவார்கள். தென்கலையினர் "U" வடிவத்தில் நாமம் கீறி ஒரு கோடு போடுவார்கள்.

இந்த நாமம் பற்றி இரு தரப்பும் தருகின்ற விளக்கம் ஒன்றுதான். நாமத்தின் இரு கரையும் உள்ள கோடுகள் பெருமாளின் பாதங்களாம். இரண்டு கோடுகளும் பெருமாளின் பாதங்கள் என்றால், நடுவில் சிவப்புக் வண்ணத்தில் உள்ள குறி எதுவென்று உங்களுக்கு விளங்கும் என்று நினைக்கிறேன்.

சைவர்கள் ஆண்குறியை லிங்கம் என்று வணங்குவார்கள். வைணவர்கள் நெற்றியில் பூசுவார்கள். இதை பின்பு சந்தர்ப்பம் வரும் போது தனியாகப் பார்ப்போம்.

இந்த வடகலை, தென்கலை நாமம் பற்றிய ஒரு சர்ச்சை வெகுபிரசித்தம். சிறிரங்கம், காஞ்சிபுரம் பெருமாள் கோயில்களில் நின்ற யானைகளுக்கு எந்த நாமம் போடுவது என்ற பிரச்சனை வந்து அது நீதிமன்றத்தில் நீண்ட காலம் இழுபட்டது.

வெள்ளைக்காரர் காலத்தில் தொடங்கிய வழக்கு இந்தியா சுதந்திரம் பெற்ற பின்பும் தொடர்ந்தது. சில நேரங்களில் ஒரு நாமத்திற்கு சார்பாக தீர்ப்பு வரும். ஆனால் அதற்குள் அந்த யானை இறந்து போயிருக்கும். இப்பொழுது புதிய யானைக்கு நீதிமன்ற தீர்ப்பின்படி நாமம் சாத்த மறு தரப்பு விடாது. அது பழைய யானைக்குத்தான் பொருந்தும், புதிய யானைக்கு எமது நாமத்தை சாத்தத்தான் வேண்டும் என்று மீண்டும் நீதிமன்றம் போவார்கள். அனேகமாக தீர்ப்பு வருவதற்கு முதல் அந்த யானையும் இறந்து போயிருக்கும்.

இங்கிலாந்து நீதிமன்றங்கள் வரை இந்தப் பிரச்சனை போனது. வெள்ளைக்கார நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் இதை "Y,U" பிரச்சனை என்றுதான் அழைப்பார்கள். இப்படி பல வேடிக்கைகளையும் பகைகளையும் உருவாக்கிய இந்த "Y,U" பிரிவுகள் ஏன் உருவாகின என்று தெரியுமா? இதற்கு காரணம் பெண் என்றால் நீங்கள் நம்புவீர்களா?

தொடரும்.....

http://www.webeelam.com

Monday, February 11, 2008

இந்து மதமும் பெண்களும் (பாகம் 5)

பார்ப்பனன் ஒருவனுடைய மகனைக் கொன்றதால் இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோசம் பிடித்து விட்டது என்று கடந்த தொடரில் பார்த்தோம் அல்லவா? இப்பொழுது தன்னுடைய தோசத்தை இந்திரன் எப்படி தீர்த்துக் கொள்கிறான் என்று பார்ப்போம்.

இந்திரன் மிகவும் விகார உருவத்தோடும் செல்வம், பொலிவு அனைத்தும் இழந்து அலைந்து கொண்டிருந்தான். தன்னுடைய தோசத்தை யாரிடமாவது இறக்கி வைத்தால், தன்னுடைய தோசம் போய்விடும் என்று இந்திரனுக்கு தோன்றியது.

முதலில் இந்திரன் பூமாதேவியிடம் போனான். தன்னுடைய தோசத்தை பெற்றுக் கொள்ளும்படி வேண்டினான். பூமாதேவி தோசம் முழுவதையும் பெற்றுக் கொள்ள மறுத்து விட்டாள். வேண்டுமென்றால் தோசத்தில் ஒரு பகுதியை பெற்றுக் கொள்வதாக கூறினாள். பதிலுக்கு தான் கேட்கும் வரத்தை தரவேண்டும் என்று பூமாதேவி சொன்னாள்.

இந்திரன் சம்மதித்து ஒரு பகுதி தோசத்தை பூமாதேவியிடம் இறக்கி வைத்தான். பூமிக்கு இப்படி பிரம்மஹத்தி தோசத்தில் ஒரு பகுதி வந்ததனால்தான் பூமியில் பல பாலைவனங்கள் உருவாகினதாம். தோசத்தை பெற்றுக் கொண்ட பூமாதேவி பூமி பிளந்தால் மீண்டும் ஒன்றாக சேருகின்ற வரத்தை கேட்டுப் பெற்றுக் கொண்டாள்.

இந்திரன் அடுத்ததாக மரங்களிடம் போனான். மரங்களிடம் ஒரு பகுதி தோசத்தை கொடுத்தான். மரங்களிற்கு தோசம் வந்ததால்தான் அதில் இருந்து பசை வடிகிறதாம். மரம் தன்னுடைய கிளைகள் வெட்டுப்பட்டால் மீண்டும் முளைக்கும் வரத்தை கேட்டுப் பெற்றது.

கடைசியாக இந்திரன் பெண்களிடம் போகிறான். தன்னுடைய நிலையை சொல்லி பெண்ணிற்கு தன்னுடைய மிகுதி தோசத்தை கொடுக்கிறான். பெண் பிரம்மஹத்தி தோசத்தை கொண்டதால் என்ன ஆனது தெரியுமா?

பார்ப்பனனின் மகனை கொலை செய்த தோசத்தை பெண்கள் பெற்றுக் கொண்டதால், அவர்களுக்கு மாதவிடாய் வரத் தொடங்கியது. தோசத்தை பெற்றுக் கொண்ட பெண் கர்ப்பமாய் இருக்கும் காலத்திலும் ஆண் சுகம் வேண்டும் என்ற வரத்தை கேட்டுப் பெற்றுக் கொண்டாள். வரத்தை இந்திரன் அருளினான்.

பொதுவாக மிருகங்கள் கர்ப்ப காலத்தில் ஒன்று சேராது. ஆனால் மனிதர்களுக்கு அப்படியில்லை. மனிதர்களால் கர்ப்பமாக இருக்கும் காலங்களிலும் சேர முடியும். இதற்கு காரணம் தோசத்தைப் பெற்றுக் கொண்ட பெண் அதற்கு ஈடாக இந்திரனிடம் பெற்ற வரந்தானாம்.

இந்து மதம் என்று சொல்லப்படுகின்ற பார்ப்பனிய மதத்தில் ஒன்றை நீங்கள் கவனிக்கலாம். அந்த மதத்தில் உள்ள அனைத்து தத்துவங்களுமே பார்ப்பனர் உயர்ந்தவர் என்றும் மற்றவர் இழிபிறப்புகள் என்றும் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கொண்டிருக்கும். ஒரு பார்ப்பனனுக்கு தீங்கு செய்ததால்தான் பூமியில் பாலைவனங்கள் உருவாகின என்றும், மரங்களில் பாசை வடிகிறது என்றும், பெண்களுக்கு மாதவிடாய் வருகிறது என்றும் ஒரு செய்தியையும் இந்தப் புராணக் கதை சொல்கிறது.

இந்த இடத்தில் ஒன்றை சுட்டிக்காட்ட வேண்டும். தொடரைப் படித்த சிலர் இந்து மதத்தின்படி ஆண்கள்தான் உயர்ந்தவர்களா என்று என்னிடம் கேட்டிருந்தார்கள். அது தவறு. பார்ப்பன ஆண்கள் உயர்ந்தவர்கள் என்பதுதான் சரி. இதைத்தான் இந்து மதம் அனைத்து வேதங்களிலும், சாத்திரங்களிலும், புராணங்களிலும் வலியுறுத்துகிறது. பார்ப்பன ஆண்களை தவிர மற்றைய அனைவரும் தாழ்ந்தவர்கள். இழி பிறப்புக்கள். பெண்கள் எந்த வர்ணமாக இருந்தாலும் இழிவானவர்கள்.

மனுதர்மம், பகவத் கீதை, வேதங்கள், சாத்திரங்கள் இந்து மத இதிகாசங்கள் என்று அனைத்தும் பெண்கள் பற்றிச் சொல்கின்ற கருத்துக்களையே மேற்கண்ட புராணக் கதையும் சொல்கிறது.

நாம் மனுதர்மத்திலும் பகவத் கீதையிலும் சில உதாரணங்களைப் பார்த்தோம். அவைகளின் கருத்துப் படி பெண் இழி பிறப்பானவள். காம குணம் உள்ளவள். கற்பு நிலையற்றவள்.

ஏன் பெண் இழிபிறப்பானவள்? அவள் பிரம்மஹத்தி தோசத்தை பெற்றிருக்கிறாள்.

பெண் காம குணம் உள்ளவளா? ஆம், அவள் மாதவிடாயால் மூன்று நாட்கள் ஆண்சுகத்தை பெற முடியாது என்று அறிந்து அதற்குப் பதிலாக, கர்ப்ப காலத்திலும் ஆண்சுகத்தை பெறுவதற்கு வரம் வேண்டியிருக்கிறாள்.

ஏற்கனவே நாம் பார்த்த சுலோகங்கள் சொல்கின்ற அதே கருத்தை இந்தக் கதையும் திருப்பிச் சொல்வதை கவனித்துப் பாருங்கள்.

இப்படி பெண்களை இழிபிறப்புகளாகவும் காமப்பிசாசுகளாகவும் இந்து மதம் கருதுவதால்தான், மந்திரங்களில் பெண்ணிற்கு நிறையக் கணவர்கள் உண்டு என்றும், பெண் அவளுடைய பிள்ளையை வேறு ஆடவனுக்கு பெற்றிருக்கக்கூடும் என்று எழுதி வைத்திருக்கிறார்கள்.

ஆனால் இந்து மத ஆச்சாரியார்களுக்கு பெண் மீது இத்தனை வெறுப்பு வந்ததற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும் அல்லவா? அது என்ன காரணம் என்ற கேள்வி உங்களுக்கு வரக் கூடும். வர வேண்டும். கேள்விகள் வந்தால்தான் நீங்கள் சிந்திக்கிறீர்கள் என்று அர்த்தம்.

அதற்கு பதிலை சொல்வதற்கு முன்பு இன்னும் ஒரு விடயத்தை சொல்ல வேண்டும். பெண் பற்றிய பிரச்சனையால் இந்து மதத்தில் ஒரு பெரும் பிளவே ஏற்பட்டது. அதை முதலில் பார்ப்போம்.

தொடரும்.....

http://www.webeelam.com

Thursday, February 07, 2008

இந்து மதமும் பெண்களும் (பாகம் 4)

மனுதர்மத்தை நல்ல புத்தி உள்ள யாருமே ஆதரிக்க மாட்டார்கள். அதை படிக்கின்ற போது குமட்டிக் கொண்டு வரும். ஆனால் மனுதர்மச் சிந்தனைதான் பார்ப்பனியத்தின் அடிப்படைச் சிந்தனை ஆகும்.

மனுதர்மத்தின் இன்னொரு பிரதியான பகவத் கீதை பெண்களைப் பற்றி என்ன சொல்கிறது என்பதை இப்பொழுது பார்ப்போம். பகவத் கீதையின் 9ஆவது அத்தியாயத்தில் சுலோகம் 32 இப்படிச் சொல்கிறது.

மாம் ஹி பார்த்த வ்யபாச்ரித்ய யே அபி ஸ்யு பாப யோனய

ஸ்திரியோ வைச்யாஸ்ததா சூத்ராஸ்தே அபி யாந்திபராம் கதிம்

அதாவது பெண்களும் சூத்திரர்களும் வைசிகர்களும் பாவ யோனியில் இருந்து பிறந்தவர்களாம். தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள பகவத் கீதைகளில் "பாவ யோனி" என்பதை "கீழான பிறப்பு", "இழி பிறப்பு" என்று மொழி பெயர்த்துள்ளார்கள். ஆங்கிலத்தில் நேரடியாகவே "born out of the womb of sin" என்று மொழி பெயர்த்திருக்கிறார்கள்.

பகவத் கீதையின் பார்வையிலும் பெண் என்பவள் இழி பிறப்புத்தான். அவள் ஒரு பார்ப்பன வீட்டில் பிறந்திருந்தாலும், அது செல்லுபடியாகாது. கவனித்துப் பார்த்தீர்கள் என்றால் ஒன்று புரியும். சூத்திரர்களுக்கு மறுக்கப்பட்டுள்ள பெரும்பான்மையான உரிமைகள் பெண்களுக்கும் மறுக்கப்பட்டுள்ளன.

முற்பிறப்பில் செய்த பாவத்தின் பயனாகத்தான் ஒருவன் பெண்ணாகவோ சூத்திரனாகவோ பிறக்கிறான் என்றுதான் இந்து மத வேதங்கள் சொல்கின்றன. அந்த வகையில் சூத்திரர்களை இழிவுபடுத்துகின்ற வேதங்கள், சாத்திரங்கள், மந்திரங்கள் போன்றவை பெண்களையும் இழிவுபடுத்துவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

"இந்து மதமும் பெண்களும்" என்ற தொடர் முடிந்த பிற்பாடு பகவத் கீதை பற்றியும் தொடராக எழுத இருப்பதால், தற்பொழுது பகவத் கீதையைப் பற்றி நான் அதிகம் எழுதாது மிகுதியை தொடர்கிறேன்.

இந்து மதத்தைப் பற்றி அறிந்தவர்கள் ராமானுஜர் பற்றி அறிந்திருப்பார்கள். குறிப்பாக வைணவ சமய மக்களால் ராமானுஜர் கடவுளின் அவதாரம் என்று போற்றப்படுகிறார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பூணூல் போடுவதில் பாரதிக்கு அவர்தான் அனேகமாக முன்னோடியாக இருக்க வேண்டும்.

தாழ்த்தப்பட்ட மக்கள் பலரை பூணூல் அணிவித்து பார்ப்பனர்களாக ராமனுஜர் மாற்றுவித்தார் என்று அவரைப் பற்றிச் சொல்வார்கள். அனைவரும் பெருமாளின் குழந்தைகளே என்றும், பெருமாள் பக்தர்களுக்குள் வேறுபாடுகள் கிடையாது என்றும் பிரச்சாரம் செய்தவராக கருதப்படும் ராமனுஜர் பல நூல்களை எழுதியுள்ளார். அவைகள் வைணவத்தின் வேதங்களாக கருதப்படுகின்றன.

அதில் "ஸ்ரீபாஸ்யம்" என்ற நூல் மிக முக்கியமானது. அதில் பெண்கள் பற்றி இப்படி சொல்லப்படுகிறது.

பகவத் பலன தானக்ருதாம்

விஸ்தீரணாம் ப்ரம்ம சூத்ர வ்ருத்திம்

பூர்வாச்சாரியாஹா சஞ்சிக்ஷபூஹி

தன்மதானு சாரேந சூத்ரா அக்ஹதாரீ

வ்யாக்யாஸ்யந்தே....

அதாவது மோட்சம் என்பது பார்ப்பனர்களுக்கு மட்டும்தான் உண்டு. சூத்திரர்களுக்கோ பெண்களுக்கோ இல்லை. சூத்திரர்களும் பெண்களும் முற்பிறப்பில் செய்த பாவத்தின் பலனாகத்தான் அவர்கள் அவ்வாறு பிறந்திருக்கிறார்கள். அவர்கள் இப்பிறப்பில் புண்ணியம் செய்து அடுத்த பிறப்பில் பார்ப்பனராக பிறந்து பின்பு மோட்சம் அடையலாம் என்பதுதான் இதன் பொருள். அத்துடன் இதை பிரம்மசூத்திரத்தை உருவாக்கிய ஆச்சாரியர்கள் சொன்னதையே தான் சொல்வதாகவும் ராமானுஜர் குறிப்பிடுகின்றார்.

பக்தர்களுக்குள் வேறுபாடு இல்லை என்று சொன்ன ராமானுஜர்தான் இப்படி எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறார். சைவத்துடன் மோதல் இருந்த காலத்தில் வாழ்ந்த ராமனுஜர் சைவத்திற்கு எதிராக ஆள் பிடிப்பதற்காக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பூணுல் அணிவித்து வைணவப் பார்ப்பனர்களாக மாற்றினாரா என்பது ஆராயத்தக்கது. சிவன் கோயிலாக இருந்த திருப்பதியை ராமனுஜர் பெருமாள் கோயிலாக மாற்றினார் போன்ற விடயங்களும் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. இதை சந்தர்ப்பம் கிடைத்தால் தனியாக பிறிதொரு முறை பார்ப்போம்.

ராமானுஜர் "ஸ்ரீபாஸ்யத்தில்" எழுதி வைத்ததுதான் பெண் குறித்த இந்து மதத்தின் உண்மையான பார்வை. அதற்கு இந்து மதத்தின் வேதங்கள், சாத்திரங்கள், புராணங்கள் அனைத்துமே ஆதரங்களாகின்றன.

பெண்களை கீழ்பிறப்பு என்று இழிவுபடுத்துகின்ற இந்து மதம் பெண்களுக்கு கல்வியையும் தடைசெய்தது. ஒரு பெண் மந்திரங்களோ, வேதங்களோ, சாத்திரங்களோ எதுவும் கற்கக் கூடாது என்று பெண்ணுக்கு கல்வியை மறுத்தது. வேத, சாத்திரங்களின் படி ஆணிற்கு மட்டும்தான் கல்வி உண்டு. சொத்து உண்டு. பெண்ணிற்கு எதுவும் இல்லை.

பெண்கள் இழிபிறப்பினர் என்ற இந்து மத கருத்தின்படி மந்திரங்களிலும் பெண் இழிவுபடுத்தப்பட்டாள். பெண்ணுக்கு கல்வி மறுக்கப்பட்டதால், அவளால் அதை புரிந்து கொள்ளவோ தட்டிக் கேட்கவோ முடியவில்லை. இதே நிலையில்தான் சூத்திரர்கள் என்று சொல்லப்பட்டவர்களும் இருந்தனர்.

ரிக், யதூர் போன்ற வேதங்களில் இருந்து பெறப்பட்ட மந்திரங்கள் பெண்ணை இழிவுபடுத்தியதைப் பார்த்தோம். மனுதர்ம சாத்திரத்தை பார்த்தோம். பகவத்கீதையைப் பார்த்தோம். இப்பொழுது இந்து மதத்தின் புராணம் ஒன்றையும் பார்ப்போம்.

ஒரு முறை இந்திரன் விஸ்வரூபன் என்பவனைக் கொன்று விட்டான். விஸ்வரூபன் ஒரு பார்ப்பனத் தந்தைக்கும் அசுர குல தாய்க்கும் பிறந்தவன். விஸ்வரூபன் ஒரு பார்ப்பனின் பிள்ளை என்பதால், அவனைக் கொன்ற இந்தரனுக்கு தோசம் உண்டாகி விட்டது.

தோசம் பிடித்ததால் இந்திரன் மிகவும் விகாரமான உருவோடு மிக அருவருப்பாகக் காட்சி அளித்தான். தன்னுடைய தோசத்தை எங்கே இறக்கி வைக்கலாம் என்று அவன் தேடித் திரிந்தான்.

இந்திரன் தன்னுடைய தோசத்தை எங்கே இறக்கி வைத்தான் தெரியுமா?

தொடரும்.....

http://www.webeelam.com

Monday, February 04, 2008

இந்து மதமும் பெண்களும் (பாகம் 3)

மந்திரங்களில் பெண் இழிவுபடுத்தப்படுவதற்கு காரணம் என்ன என்பதை இனிப் பார்ப்போம். இந்து மதத்திற்கு பெண்கள் மீது வெறுப்பு ஏன் உருவானது என்பதை பார்ப்பதற்கு முன், இந்த மதத்தின் மற்றைய நூல்கள் பெண்களைப் பற்றி என்ன சொல்கின்றன என்பதையும் பார்த்து விடுவோம்.

இந்த மத வேதங்களின் படி பெண் என்பவள் ஒரு கீழான பிறவி. சூத்திரர்கள் எப்படி கீழான பிறவிகள் என்று இந்து மத வேதங்களும் சாத்திரங்களும் சொல்கிறதோ, அதே போன்றுதான் பெண்களும் கீழான பிறவிகள். பல இடங்களில் சூத்திரர்களை விடவும் மிகக் கீழான நிலையில்தான் பெண்களை இந்து மத வேதங்களும் சாத்திரங்களும் வைத்திருக்கின்றன.

இந்த இடத்தில் சுருக்கமாக இன்னும் ஒரு விடயத்தைப் பார்ப்போம்.

இஸ்லாமியர்கள் குர்ரானையும் கிறிஸ்தவர்கள் பைபிளையும் கொண்டு இந்திய துணைக் கண்டத்திற்குள் நுழைந்த பொழுது, பார்ப்பனர்களுக்கு அதைப் போன்று எந்த நூலை தங்களுடைய பார்ப்பனிய இந்து மதத்தின் மதநூலாக காட்டுவது என்று தெரியவில்லை.பொதுவான இந்து மதம் என்கின்ற ஒன்று இல்லாத பொழுது, அதற்கு என்று எப்படி ஒரு பொதுவான மதநூல் இருக்க முடியும்?

என்றாலும் பார்ப்பனர்கள் மனுதர்மத்தையும், பகவத்கீதையையும் இந்து மத "பைபிள்களாக" முன்வைத்தார்கள். பார்ப்பனிய மதம்தான் இந்து மதம் என்று பார்க்கின்ற போது இது ஒரு சரியான செயல்தான். மனுதர்மம், பகவத்கீதை போன்றவைகள் வேறு மொழிகளிலும் அச்சிடப்பட்டன.

உண்மையில் இன்று வரை இந்து மதம் மனுதர்மத்தின் அடிப்படையில்தான் இயங்குகிறது. ஆலய வழிபாடுகள், விழக்கள், சடங்குகள் என்று அனைத்துமே மனுதர்மம் வகுத்துக் கொடுத்தன்படிதான் இயங்குகிறது. இதை விட முக்கியமாக அரசுகள் கூட மனுதர்மத்தின் அடிப்படையில் இயங்க வைக்கப்பட்டன.

மனுநீதி சோழன் போன்ற சொற்களை கேள்விப்பட்டிருப்பீர்கள். மனுதர்மம்தான் மனுநீதி. மனுதர்மத்தின் படி பார்ப்பனர்களுக்கு கட்டுப்பட்டு, அவர்களின் ஆலோசனைப்படி ஆட்சி செய்த சோழனை "மனுநீதிச் சோழன்" என்று அழைத்தார்கள்.

இந்த இடத்தில் இன்னும் ஒரு சிறு தகவல். பல நாடுகளை வென்று ஆசியாவின் பெரும் வல்லரசாக விளங்கிய சோழப் பேரரசு வீழ்ந்ததும் இந்த "மனுதர்ம" பார்ப்பனர்களினால்தான். பல போர்களைப் புரிந்ததால், பல பாவங்கள் சேர்ந்து விட்டதாக சோழ மன்னன் நம்பவைக்கப்பட்டான். அந்தப் பாவங்களைப் போக்குவதற்கு பார்ப்பனர்களுக்கு நிறைய தானங்கள் கொடுக்க வேண்டும் என்று பார்ப்பனர்களால் அவனிடம் சொல்லப்பட்டது. பார்ப்பனர்களுக்கு பொன்னும், பொருளும், நிலமும் வழங்கி, மிகுதிப் பணத்தில் கோயில்களும் கட்டி சோழப் பேரரசு தன்னுடைய பலத்தை இழந்து வீழ்ச்சி கண்டது. இதை பின்பு தனியாகப் பார்ப்போம்.

(இதனால்தான் பார்ப்பனராகிய மதன் சோழப் பேரரசு பற்றிய வரலாற்றை எழுதுவதற்கு "வரலாறே இல்லை" என்று ஒரு பொய்யைச் சொல்லி மறுத்தாரா என்பது தனியாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒரு விடயம்)

இப்பொழுது மீண்டும் விடயத்திற்கு வருகிறேன்.

மனுதர்மம் பலரால் கிழி கிழியென்று கிழிக்கப்பட்டு துவைத்துக் காயபோடப்பட்டு விட்டதால், தற்பொழுது மனுதர்மத்தை முன்னிறுத்துவதைக் குறைத்துக் கொண்டு பகவத் கீதையை முன்னிறுத்தி வருகிறார்கள்.

இந்த மனுதர்மமாக இருக்கட்டும் அல்லது பகவத் கீதையாக இருக்கட்டும் அல்லது மற்ற வேதங்களாக இருக்கட்டும், பெண்ணைப் பற்றி என்ன சொல்கிறது? முதலில் மனுதர்மம் சொல்கின்ற சில விடயங்களைப் பார்ப்போம்.

மனுதர்மமத்தின் தொடக்கம் ஏறக்குறைய பைபிள் போன்றுதான் இருக்கிறது. பைபிளைப் போன்றே உலகம் உருவான கதையில் தொடங்குகிறது. பின்பு ஒவ்வொரு வர்ணத்தினருடைய கடமைகள், குணங்கள், பாவங்கள், தண்டனைகள் என்று விரிகிறது.

இதிலே 9வது அத்தியயாம் பெண்களைப் பற்றி பேசுகிறது. 9வது அத்தியாயத்திலே மனுதர்மம் பெண்கள் பற்றி சொல்கின்ற சில விடயங்களைப் பார்ப்போம்.

பெண்கள் இளமைப் பருவத்தில் தந்தையாலும் பின்பு கணவனாலும், மூப்பில் மைந்தனால் காக்கப்படுபவர்கள். அவர்கள் சுயமாக இயங்கும் தன்மை உடையவர்கள் அல்லர்.(சுலோகம் 3)

பெண்கள் கற்புநிலை அற்றவர்களாகவும், நிலையான மனம் அற்றவர்களாகவும், நட்புத்தன்மை அற்றவர்களாகவும் இயற்கையாகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள்.(சுலோகம் 15)

இந்தச் சுபாவம் பெண்களைப் படைக்கின்ற போதே பிரம்மனால் கொடுக்கப்பட்டிருக்கிறது(சுலோகம் 16)

படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோகசிந்தனை போன்றவைகள் பெண்களுக்காகவே படைக்கப்பட்டிருக்கிறது(சுலோகம் 17)

பெண்களுக்கு என்று மந்திரங்கள் இல்லை. பெண்களுக்கு மனச்சுத்தி கிடையாது. பெண்களின் பாவத்தை போக்குவதற்கான மந்திர உபதேசமும் கிடையாது. பெண்கள் பொய்யைப் போன்று பரிசுத்தம் அற்றவர்கள்(சுலோகம் 18)

பெண்கள் சுயமாக இயங்குகின்ற தன்மை அற்றவர்கள். பெண்கள் இயற்கையாகவே நிலையான மனம் அற்றவர்கள். கற்பு நிலை அற்றவர்கள். காமம், கோபம், துரோகம் அனைத்தும் பெண்களுக்காவே படைக்கப்பட்டிருக்கிறது. இவைகைள எல்லாம் பெண்களைப் படைக்கும் போது பிரம்மன் அவர்களுக்காக உருவாக்கியுள்ளார். இந்தப் பாவங்களை மாற்ற முடியாது. அதற்கான மந்திரங்கள் எதுவும் எல்லை. பெண்கள் மந்திரங்களை ஓதவும் கூடாது. மனுதர்மம் பெண்கள் பற்றிச் இப்படித்தான் சொல்கிறது.

இதை விட ஒரு பெண் ஒவ்வொரு ஜாதிக்காரனுடன் உறவு வைத்தால் என்ன தண்டனை, கணவனுக்கு பணிவிடை செய்யாவிட்டால் என்ன தண்டனை என்று மற்றைய சுலோகங்கள் நீண்டு, பெண்களை எவ்வளவு அசிங்கப்படுத்த முடியுமோ அத்தனை தூரம் மனுதர்மம் அசிங்கப்படுத்துகிறது.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக பெண் குழந்தைகளை பெறுவதையே குற்றம் என்றுதான் மனுதர்மம் சொல்கிறது.

ஒரு ஆண் எப்பொழுது தன்னுடைய மனைவியை "விவாகரத்து" செய்யலாம் என்று மனுதர்மம் விளக்குகிறது.

மலடியான மனைவியை எட்டு வருடத்திற்குப் பின்பும், ஊனம் உள்ள பிள்ளையை பெறுபவளை பத்து வருடத்திற்கு பின்பும், பெண்களையே பெறுபவளை பதினொரு வருடத்திற்குப் பின்பும், தீங்கு சொல்பவளை உடனடியாகவே நீக்கி விட்டு வேறு விவாகம் செய்து கொள்க. நீக்கப்பட்ட மனைவியர்களுக்கு எந்தப் பொருளும் கொடுக்கத் தேவை இல்லை.(சுலோகம் 81)

இந்து மத வேதங்கள், சாத்திரங்களின் படி பெண் இயற்கையாகவே கற்புநிலை அற்றவள். நிலையான மனம் அற்றவள். காமம் உடையவள். பெண் பிறப்பு ஒரு இழிவான பிறப்பு. அதை மந்திரங்களால் மாற்ற முடியாது. பெண் குழந்தையை பெறுவதே குற்றம்.

இப்பொழுது ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள். திருமணத்தில், ஈமச் சடங்கில் பெண் கற்பு அற்றவள் என்ற அடிப்படையில் சொல்லப்படும் மந்திரங்களின் அடிப்படை புரிகிறது அல்லவா?

ஆயினும் உங்களுக்கு வேறு சில கேள்விகள் எழக் கூடும். இந்தத் தொடரை தொடர்ந்து படிக்கின்ற போது அவைகளுக்கான பதில்களையும் நீங்கள் பெறுவீர்கள்.

தொடரும்.....

http://www.webeelam.com

Saturday, February 02, 2008

இந்து மதமும் பெண்களும் (பாகம் 2)

மணமுடிக்கப் போகின்றவளை ஏற்கனவே பலருக்கு மனைவியாக இருந்தவள் என்றும், அவர்களோடு படுக்கையில் இருந்தவள் என்றும் சொல்லி கொச்சைப்படுத்தும் திருமணங்களை பார்த்தோம்.

இனி எம்மை ஈன்றெடுத்த தாயையே கொச்சைப் படுத்துகின்ற இரண்டு மந்திரங்களைப் பார்ப்போம்.

மதத்தை தாய் தந்தையுடன் ஒப்பிட்டுப் பேசுகின்ற பலரை நான் கண்டிருக்கிறேன். அவர்களுடைய பார்வையில் மதம் என்பது தாய் தந்தை போன்றது. எப்படி நாம் தாய் தந்தையை மாற்ற மாட்டோமோ, எப்படி நாம் தாய் தந்தை மீது சந்தேகம் கொள்ள மாட்டோமோ அதே போன்று மதத்தை மாற்றவோ, அதன் மீது சந்தேகம் கொள்ளக் கூடாது என்பது அவர்களுடைய வாதம்.

மதம் மாறுவது எனக்கும் ஏற்புடையது அன்று. ஒரு குப்பையில் இருந்து இன்னொரு குப்பைக்குள் போவது முட்டாள்தனமானது. மதங்கள் என்ற குப்பைகளை விட்டு வெளியே வந்த நல்ல காற்றை சுவாசிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து.

ஆனால் மதம் மாறக் கூடாது, மதம் பற்றி கேள்வி எழுப்பக் கூடாது என்று சொல்வதற்காக தாய், தந்தையுடன் மதத்தை ஒப்பிடுவது மிக அபத்தமானது.

மதம் குறித்து என்னுடன் வாதிட்ட ஒருவர் "அத்தாட்சிப் பத்திரம் காட்டினால்தான் நீங்கள் உங்களுடைய அப்பா, அம்மாவை நம்புவீர்களா?" என்றெல்லாம் ஆவேசமாக கேள்வியை எழுப்பினார். இன்னொருவர் நான் அப்பாவையே மாற்றி விட்டேன் என்று மறைமுகமாக என்னுடைய தாயை வசைபாடினார். இப்படியானவர்களைப் பார்த்து என்னால் பரிதாபப்படத்தான் முடிகிறது.

இவ்வாறான கேள்விகளை மதவெறியுள்ளவர்களும் சிந்தனை வறட்சியுள்ளவர்களுமே கேட்பதால், அவர்களுக்கு உண்மையை புரிய வைப்பதும் மிகக் கடினமானதாகவே இருக்கிறது. ஆனால் இவர்கள் எல்லோரும் நாக்கைப் புடுங்கிக் கொண்டு சாவது போன்று இவர்களுடைய இந்த மதமே "அப்பன் பேர் தெரியாதவன்" என்று இவர்களை சொல்வதுதான் இதில் வேதனையான வேடிக்கை.

எம்மவர்கள் சம்பிரதாயம் என்ற பெயரில் செய்கின்ற பல முட்டாள்தனமான விடயங்களில் இறந்தவருக்கு திதி கொடுப்பதும் ஒன்று. என்ன செய்வது? பிறப்பில் தொடங்கி இறப்பு வரை பார்ப்பான் வந்து சமஸ்கிருதத்தில் அசிங்கமாகவும் அருவருப்பாகவும் திட்டிவிட்டுப் போனால்தான் தமிழனுக்கு நிம்மதியாக இருக்கின்றது.

இப்பொழுது இறந்தபின் நடக்கின்ற சடங்குகளில் சொல்லப்படும் இரண்டு மந்திரங்களைப் பார்ப்போம். முதலில் இறந்த தந்தைக்கு திவசம் செய்கின்ற போது சொல்லப்படும் ஒரு மந்திரம்

யன்மே மாதா பிரலுலோப சரதி அனனு விருதா

தன்மே ரேதஹ பிதா விருங்க்தா ஆபுரண் யோப

பத்யதாம் ரங்கராஜ சர்மணே ஸ்வாஹா

ரங்கராஜ சர்மணே அஸ்மது பித்ரே இதம் நமம

கிருஸ்ண கிருஸ்ண கிருஸ்ண...

இந்த மத்திரத்தின் அர்த்தம்:

என்னுடைய அம்மா பத்தினியாக இல்லாது இருந்து, என்னை வேறு ஒருவருக்கு பெற்றிருந்தால், இந்த திவசத்திற்கு உரிமை கோரி என்னுடைய உண்மையான தகப்பனார் வருவார். அப்படி இல்லாது என்னுடைய அம்மாவின் கணவரே இந்த திவசத்தை பெறட்டும். இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம்.

அதாவது திதி கொடுப்பவனுடைய தாய் சில வேளைகளில் சோரம் போய் வேறு யாருக்காவது அவனைப் பெற்றிருக்கலாம் என்று இந்த மந்திரம் சொல்கிறது. உன்னுடைய அப்பா வேறு யாராவதாக இருக்கலாம், நீ அப்பன் பேர் தெரியாதவனாக இருக்கலாம் என்று இந்த "புனித" மந்திரம் சொல்கிறது.

தந்தைக்கு திவசம் செய்கின்ற போதுதான் இப்படி என்று நினத்து விடாதீர்கள். இந்து மதம் தாய்க்கு செய்கின்ற திவசத்திலும் வஞ்சகம் வைக்கவில்லை.

அம்மாவிற்கு திவசம் செய்கின்ற போது சொல்கின்ற ஒரு மந்திரம் இது

என்மே மாதா ப்ரவது லோபசரதி

அன்னவ் வ்ரதோ தன்மே ரேதஹ

பிதா வ்ருந்த்ததாம் ஆபுரண்யஹா

அவபத்ய நாம....

என்னுடைய அம்மா யாருடன் படுத்த என்னைப் பெற்றாளோ தெரியவில்லை. ஒரு நம்பிக்கையில்தான் அவளை என்னுடைய அப்பாவின் மனைவியாகக் கருதுகின்றேன். அந்த அம்மாவிற்கு இந்த திவசம் போய் சேரட்டும்.

உண்மையில் இந்த மந்திரம் அர்த்தம் அற்றது. தாய்க்கு கொடுக்கின்ற திதியில் தந்தை யார் என்ற கேள்வி எழத் தேவையில்லை. தந்தைக்கு திதி கொடுக்கின்ற போதாவது தாய் சோரம் போயிருந்து, அதனால் உண்மையான தந்தை வந்து விட்டால் என்னாவது என்ற கேள்வியோடு அந்த மந்திரத்தை தொடர்புபடுத்தலாம். ஆனால் தாயக்கு கொடுக்கும் திதியிலும் அவள் சோரம் போயிருக்கலாம் என்று சொல்வதற்கு அவசியமே இல்லை. ஆயினும் மந்திரம் அப்படித்தான் சொல்கிறது.

எந்த மதத்தை தாய், தந்தையோடு ஒப்பிட்டு உறுதியாக நம்புகிறீர்களோ, அந்த மதத்தின் சம்பிரதாயங்களே உங்களுடைய அம்மாவை "நம்பத்தகாதவள்" என்கிறது. நடத்தை கெட்டவளாக இருக்கலாம் என்கிறது. நீங்கள் வேறு அப்பனுக்கு பிறந்திருக்கலாம் என்கிறது. சம்பிரதாயம் என்று பிதற்றுபவர்களுக்கும், மதத்தை பெற்றோரோடு ஒப்பிடுபவர்களுக்கும் இதை விட வேறு கேவலம் ஏற்படப் போவதில்லை.

இந்த மந்திரங்கள் பற்றிய விவாதம் ஒன்றில் ஒருவர் என்னிடம் சில கேள்விகளை எழுப்பியிருந்தார். "இந்த மந்திரங்களை பார்ப்பனர்கள் தங்கள் வீட்டு நிகழ்வுகளில் சொல்ல மாட்டார்களா? அப்படிச் சொன்னால் தங்கள் வீட்டுப் பெண்களை கேவலப்படுத்துவது போன்று இல்லையா? பார்ப்பனர்கள் என்ன அவ்வளவு முட்டாள்களா?" இவ்வாறான கேள்விகளை அடுக்கினார்.

இங்கேதான் நாம் சில விடயங்களை சற்று ஆழமாகப் பார்க்க வேண்டும். இந்த மந்திரங்களில் ஒரு விடயத்தை கவனித்திருப்பீர்கள். திருமண மந்திரங்கள் மணமகனை கொச்சைப்படுத்தவில்லை. மணமகளைத்தான் கொச்சைப்படுத்துகின்றன. ஈமச் சடங்கின் மந்திரங்கள் தந்தையை கொச்சைப்படுத்தவில்லை. தாயைத்தான் கொச்சைப்படுத்துகின்றன.

இப்படி மந்திரங்கள் பெண்களைத்தான் கொச்சைப்படுத்துகின்றன. இது ஏன்? இந்து மதத்திற்கு பெண்ணின் மேல் அப்படி என்ன வெறுப்பு? இனி இதற்கான காரணங்களைப் பார்ப்போம்

தொடரும்....

http://www.webeelam.com

Friday, February 01, 2008

இந்து மதமும் பெண்களும் (பாகம் 1)

சில மாதங்களிற்கு முன்பு திருமண மந்திரங்கள் பற்றிய ஒரு பதிவை சில தளங்களில் எழுதினேன். இதையடுத்து நான் எழுதியது சரியா என்று ஒரு விவாதம் ஏற்பட்டது. ஒரு பத்திரிகையில் இந்த மந்திரங்கள் பற்றி எழுதிய போது, யரோ ஒரு பார்ப்பனர் "மந்திரங்கள் புனிதமானவை, அதை குற்றம் சொல்லக் கூடாது" என்று ஒரு கடிதம் மட்டும் எழுதியிருந்தார். வேறு எந்த விளக்கமும் எழுதவில்லை.

ஆனால் கருத்துக் களங்களில் திருமண மந்திரங்கள் பற்றிய என்னுடைய கருத்து தவறு என்று சிலர் வாதிட்டார்கள். சில விளக்கங்களை முன்வைத்தார்கள். அவைகளுக்கு பதில் அளிக்க முனைந்த பொழுதே, அது நீண்டு இப்படியான ஒரு தொடருக்கு வித்திட்டது. அந்த வகையில் இந்தத் தொடருக்கு காரணமான திருமணங்களில் சொல்லப்படும் மந்திரங்கள் பற்றி முதலில் ஒரு முறை பார்ப்போம்.

தமிழர்களைப் போன்று ஒரு இளிச்சவாயர்களை நான் எங்கும் காணவில்லை. தனக்குத் தெரியாத ஒரு மொழியில் எந்த ஒரு விடயத்தையும் யாரும் செய்ய மாட்டார்கள். அப்படிச் செய்வது என்றாலும், சொல்லப்படுவதன் அர்த்தத்தை புரிந்து கொண்டுதான் செய்வார்கள். ஆனால் நாமோ பிறப்பில் இருந்து இறப்பு வரை மதத்தின் பெயரில் எமக்கு தெரியாத ஒரு மொழியிலேயே அனைத்து சடங்குகளையும் செய்து வருகிறோம். உண்மையில் இந்தச் சடங்குகளும், அதில் சொல்லப்படும் மந்திரங்களும் எம்மை இழிவுபடுத்துவதை நாம் உணர்ந்து கொள்வதும் இல்லை. உணர்ந்து கொள்ள விரும்புவதும் இல்லை.

திருமணத்தின் போது சொல்லப்படும் சில மந்திரங்களை பார்ப்போம்

'சோமஹ ப்ரதமோ விவிதே கந்தர்வோ

விவித உத்ரஹ த்ரியோ அக்னிஸ்டே பதி

துரியஸ்தே மனுஷ்ய ஜாஹ'

இந்த மந்திரம் மணமகளை நோக்கி சொல்லப்படுகிறது.

நீ முதலில் சோமனுக்கு (சந்திரன்) உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய். இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம்.

அதவாது மணமகள் ஏற்கனவே மூன்று பேருக்கு மனைவியாக இருந்தவளாம். இப்பொழுது நான்காவதாக ஒருவனுக்கு மனைவியாகப் போகிறார்களாம். அத்துடமன் அவள் எந்தக் காலத்தில் யாருக்கு மனைவியாக இருந்தால் என்று ஆபாசமான விளக்கங்கள் (ரோமம் வளரும் போது கந்தர்வனுக்கு....) வேறு இருக்கிறது.

இதை பல பார்ப்பனர்களே இன்று ஒத்துக் கொள்கிறார்கள். ஆனால் மக்களை ஏமாற்றி தலையில் மிளகாய் அரைப்பதை மட்டுமே வழக்கமாக கொண்டுள்ள சிலர் வேறு அர்த்தம் சொல்வார்கள்.

அதாவது மந்திரத்தில் உள்ள "பதி" என்ற சொல் கணவன் என்ற அர்த்தத்தில் சொல்லப்படுவது இல்லை. பாதுகாவலன் என்ற அர்தத்தில்தான் சொல்லப்படுகிறது. "முதலில் சந்திரன் அவளை பாதுகாத்தான், பின்பு கந்தர்வன் பாதுகாத்தான், பின்பு அக்னி பாதுகாத்தான்" என்று ஒரு விளக்கத்தை இவர்கள் சொல்வார்கள். பெண்ணின் உடலில் ஏற்படும் வளர்ச்சிக்கு அமைய இந்த மந்திரங்கள் அமைக்கப்பட்டது என்று "அறிவியல்" விளக்கம் வேறு தருவார்கள்.

சிலர் இன்னும் ஒரு படி மேலே போய் சோமன், கந்தர்வன், அக்னி ஆகியோர் அந்தப் பெண்ணிற்கு தந்தையாக இருந்தார்கள் என்று சொல்வார்கள்.

ஆனால் வேதங்களிலும் புராணங்களிலும் ஒரு பெண்ணிற்கு "பதி" என்பது அவள் கணவன் என்றுதான் சொல்லப்படுகிறது. அத்துடன் அதே வேதங்களிலும் புராணங்களிலும் "பொம்பிளைப் பொறுக்கிகளாக" சொல்லப்படுகின்ற சோமன், கந்தர்வன், அக்னி போன்றவர்களின் "பாதுகாப்பில்" தன்னுடைய மனைவி இருந்தாள் என்பது குறித்து எந்தக் கணவன் மகிழ்ச்சி அடைவான் என்ற கேள்வியும் இங்கு எழுகின்றது.

திருமண மந்திரங்கள் இவற்றுடன் முடிந்து விடவில்லை. தொடர்ந்து வருகின்ற திருமண மந்திரங்கள் இவர்கள் சொல்கின்ற இந்த மோசடி விளக்கத்தை சுக்கு நூறாக உடைக்கின்றன.

"உதீர்ஷ்வாதோ விஷ்வாவஸேர் நம ஸேடா மஹேத்வா

அந்யா ப்ரபர்வ்யகும் ஸஞ்ஜாயாம் பத்யா ஸ்குஜ"

"உதீர்ஷ்வாத பதிவதீ ஹ்யேஷா விஷ்வாவஸீந் நமஸ கீர்ப்பீரிடடே

அந்யா மிச்ச பித்ரு பதம வ்யக் தாகும் ஸதே பாகோ ஜனுஷா தஸ்ய வித்தி"

இந்த மந்திரங்களின் பொருள் என்னவென்று தெரியுமா?

விஷ்வாவஸ் என்னும் கந்தர்வனே! இந்தப் படுக்கையில் இருந்து எழுந்திருப்பாயாக!உன்னை வணங்கிக் கேட்டுக் கொள்கிறோம். நீ வேறு கன்னிகையை விரும்புவாயாக! என் மனைவியை அவளுடைய கணவனுடன் சேர்த்து வைப்பாயாக!

இந்தப் படுக்கையில் இருந்து எழுந்திருப்பாயாக! இந்தப் பெண்ணுக்கு கணவன் இருக்கிறான் அல்லவா! விஷ்வாவஸாகிய உன்னை வணங்கிக் கேட்டுக் கொள்கிறோம். தகப்பின் வீட்டில் இருப்பவளும், இதுவரை திருமணம் ஆகாத கன்னிகையை நீ விரும்பவாயாக! உன்னுடைய அந்தப் பங்கு பிறவியினால் ஆகிவிட்டது என்று அறிவாயாக!

இப்பொழுது சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்! மணமகளிற்கு தந்தை ஸ்தானத்தில் இருந்து பாதுகாவலனாக விளங்கிய கந்தர்வனுக்கு அந்தப் பெண்ணின் படுக்கையில் என்ன வேலை?

நான் சொன்னதை மீண்டும் சொல்கிறேன். சோமன், அக்னி, கந்தர்வன் போன்றவர்களை மணமகளின் கணவர்கள் என்றுதான் மந்திரம் சொல்கிறது. இவற்றை விட மணமகளை முப்பது முக்கோடி தேவர்களுக்கும் மனைவியாக்கி, பின்பு புரோகிதம் சொல்லும் பார்ப்பானுக்கு மனைவியாக்கி, இவற்றிற்கு எல்லாம் கணவனின் சம்மதம் பெற்று... இப்படி இந்த மந்திரங்கள் நீண்டு செல்கின்றன.

இவைகள் இருக்கட்டும். வேறு சில திருமண மந்திரங்களை பார்ப்போம்.

தாம்பூஷன் சிவதமாம் ஏவயஸ்வ

யஸ்ஸாம் பீஜம் மனுஸ்யா பவந்த்தீ

யான ஊரு உஷதி விஸ்ரயாதை

யஸ்யா முஷந்தஹா ப்ரஷரே பஷேபம்

இதனுடைய அர்த்தம்: நான் அவளோடு உறவு கொள்ளும் பொழுது எமது பாகங்கள் பொருந்துவதற்கு தேவதைகளே நீங்கள் உதவ வேண்டும்.

இன்னும் ஒரு மந்திரம்:

விஸ்ணுர் யோனி கர்ப்பயது

தொஷ்டா ரூபானி பீமிசது

ஆரிஞ்சது ப்ரஜாபதி

தாதா கர்ப்பந்தாது

இதனுடைய அர்த்தம், பெண்ணினுடைய அந்தரங்க பகுதி மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. மூன்று பாகங்களிலும் மூன்று தெய்வங்கள் இருந்து காவல் காக்கிறார்கள். (தெய்வங்களுக்கு வேறு வேலையே இல்லையா? )

உறவின் பொழுது எல்லாம் சரியாக நடக்கிறதா என்று கண்காணிக்கின்ற வேலையையும் இவர்கள் செய்கிறார்கள்.

ஒன்றிற்கு மூன்று தெய்வங்கள் பெண்ணின் அந்தரங்க உறுப்பில் இருந்து கொண்டு எல்லாம் சரியாக பொருந்துகிறதா என்று காவல் காக்கிறார்கள் என்றால், ஒரு பெண் வல்லுறவிற்கு உட்படுத்தம்படும் போது, அதை தடுத்தால் மிகப் பெரிய உபகாரமாக இருக்குமல்லவா? அதற்கும் ஏதாவது மந்திரங்கள் சொன்னால் நன்றாக இருக்குமே!

இப்படியான மந்திரங்களை சொல்லி நடக்கின்ற திருமணங்களையே எமது தமிழர்கள் செய்கிறார்கள். இவைகளை விட்டு திருக்குறள் சொல்லி திருமணங்கள் செய்யுங்கள் என்றால், "கடவுள், மதம்" என்று அடம்பிடிக்கிறார்கள்.

தமிழினத்தை எப்படி திருத்த முடியும்?

திருமண மந்திரங்கள் ஒரு மணமகள் எவ்வளவு தூரம் இழிவுபடுத்தப்படுகிறாள் என்பதை பார்த்தோம். எம்மை ஈன்றெடுத்த தாயையே இந்த மந்திரங்கள் மிக மோசமாக கொச்சைப்படுத்துகின்றன என்பது உங்களுக்கு தெரியுமா?

தொடரும்.......

http://www.webeelam.com

Thursday, January 24, 2008

ஒரு மொழியின் இறப்பு

ஒரு மொழியின் இறப்புகடந்த திங்கட் கிழமை அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் "மரியா ஸ்மித் ஜோனெஸ்" என்ற பெண்மணி இறந்து விட்டார். ஒன்பது பிள்ளைகளுக்கு தயான இவர் இறக்கும் போது இவருடைய வயது 89. இவருடைய இறப்பு பலருக்கு துயரத்தை கொடுத்துள்ளது. அவருடைய இழப்பை யாராலுமே ஈடு செய்ய முடியாது என்று சொல்கிறார்கள்.

பழங்குடி இனத்தை சேர்ந்த மரியா ஸ்மித் அலாஸ்காவில் வாழும் பழங்குடி மக்களின் உரிமைக்காக பல போராட்டங்களை மேற்கொண்டவர். ஆனால் அவருடைய இறப்பு யாராலும் ஈடு செய்ய முடியாததாக பார்க்கப்படுவதற்கு காரணம் அது இல்லை. உண்மையான காரணம், மரியா ஸ்மித் போகும் போது ஒரு மொழியையும் தன்னுடனே சேர்த்துக் கொண்டு போய் விட்டார்.

ஆம், அலாஸ்காவின் பழங்குடி மக்களின் மொழிகளில் ஒன்றான "ஏயக்" என்கின்ற மொழியை பேசத் தெரிந்த உலகின் கடைசி மனிதராக அவர் மட்டும்தன் இருந்தார். அவர் இறந்ததன் பிறகு இன்றைக்கு உலகில் யாருக்குமே அந்த மொழியை பேசத் தெரியாது. கடந்த திங்கட் கிழமையோடு உலகில் ஒரு மொழி அழிந்து விட்டது.

மரியா ஸ்மித்திற்கு ஒன்பது பிள்ளைகள் இருந்தும், யாருமே "ஏயக்" மொழியை கற்பதற்கு ஆர்வம் காட்டவில்லை. எல்லோரைப் போன்று அவர்களும் ஆங்கிலம் கற்பதும், பேசுவதும்தான் நாகரீகமாதும், தேவையானதும் என்ற கருத்தோடு இருந்து விட்டார்கள். "ஏயக்" மொழியைப் பேசும் கடைசி மனிதராக தான்தான் இருக்கப் போகின்றேன் என்ற விடயம் மரியா ஸ்மித்திற்கு அன்றைக்கு தெரிந்திருந்ததா என்பதும் தெரியவில்லை.

"ஏயக்" மொழி பேசத் தெரிந்த மரியா ஸ்மித்தின் ஒரு சகோதரி 1993இலேயே இறந்து விட்டார். அதன் பிறகு மரியா ஸ்மித்தோடு "ஏயக்" மொழியில் உரையாடுவதற்கு யாருமே இருக்கவில்லை.

"ஏயக்" மொழி அழிந்து விடக் கூடாது என்பதற்கு மரியா ஸ்மித் சில நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஒரு மொழியியல் வல்லுனரின் உதவியோடு "ஏயக்" மொழிக்கான அகராதியையும், இலக்கண நூலையும் தயாரித்தார். இனிமேல் யாராவது இந்த நூல்களின் உதவியோடு ஏயக் மொழியை கற்றுப் பேசினால் மட்டும்தான், அந்த மொழி மீண்டும் உயிர் பெறும்.

ஏயக் மொழிக்கு மட்டும்தான் இந்த நிலைமை என்று இல்லை. உலகின் பெரும்பாலான மொழிகளின் நிலைமை இதுதான். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒரு மொழி அழிவதாக மொழியியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றார்கள். மரியா ஸ்மித் வாழ்ந்த அலாஸ்காவில் பேசப்படுகின்ற மொழிகளில் மேலும் 20 மொழிகள் விரைவில் அழிந்து விடும் நிலையில் இருக்கின்றன. உலகம் எங்கும் மொழிகள் அழிந்து வரும் வேகம் அதிகரிக்கின்றதே தவிர குறையவில்லை.

ஒரு மொழி அழிகின்ற பொழுது ஒரு இனத்தின் பண்பாடு அழிகிறது. இன்னும் சொல்வது என்றால் ஒரு இனமே அழிகிறது. அழிகின்ற மொழிகளில் பெரும்பாலானவை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகப் பழமையான மொழிகள். அந்த மொழிகளுக்குள் மனித குலத்தின் வரலாற்றின் பெரும் பகுதி புதைந்து கிடக்கின்றது. மொழிகளோடு மனித குலத்தின் வரலாற்று உண்மைகளும் அழிந்து போகின்றன.

இன்றைக்கு உலகிலே வாழுகின்ற அறுநூறு கோடி மக்களும் மொத்தம் ஆறாயிரம் மொழிகளைப் பேசுகின்றார்கள். நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆறாயிரம் மொழிகளிலே அறுநூறு மொழிகள் மட்டுமே மிஞ்சியிருக்கும். மிச்சம் ஐந்தாயிரத்து ஐந்நூறு மொழிகளும் அழிந்து விடும். இது மொழியியல் வல்லுனர்களின் தீவிரமான ஒரு எச்சரிக்கை.

இன்றைக்கு பேசப்படுகின்ற ஆறாயிரம் மொழிகளில் மூவாயிரம் மொழிகளை ஆயிரத்திற்கும் குறைவானவர்களே பேசுகின்றார்கள். ஏறக்குறைய ஆயிரத்து ஐந்நூறு மொழிகளை நூறு பேர் வரையிலானவர்களே பேசுகிறார்கள். ஐந்நூறு மொழிகளை வெறும் பத்துப் பேர்தான் பேசுகிறார்கள்.

ஒரு மொழி நிலைத்து நிற்பதற்கு ஆகக் குறைந்தது ஒரு இலட்சம் பேராவது அந்த மொழியை பேச வேண்டும் என்பது மொழியியல் வல்லுனர்களின் கருத்து.

அந்த வகையில் தமிழ் மொழி தற்போதைக்கு அழியாது என்று நம்பலாம். உலகில் மிக அதிகமானவர்களால் பேசப்படுகின்ற இருபது மொழிகளின் பட்டியலில் தமிழும் இருக்கின்றது. கல்வெட்டில் இருந்து கணணி வரை தமிழ் மொழி பரந்து நிற்கின்றது. ஆனால் ஒரு மொழி அழிவதற்கு தேவையான அனைத்துக் காரணங்களையும் தமிழ் மொழியும் கொண்டுதான் இருக்கின்றது என்பது இதிலே ஒரு அபாயகரமான செய்தி.

ஒரு மொழி அழிவதற்கான முக்கிய காரணங்களாக சில விடயங்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன. மொழிக்குள் மற்றைய மொழிகளின் ஊடுருவலும் ஆதிக்கமும், வட்டாரப் பேச்சு வழக்குகள் தனி மொழிகளாக கிளர்வது, இளந்தலைமுறை மொழியை கற்கவும் பேசவும் ஆர்வம் அற்று இருப்பது போன்றவை ஒரு மொழி அழிவதற்கு முக்கிய காரணங்கள்.

வேற்று மொழிகளின் ஊடுருவல் தமிழுக்குள் மித மிஞ்சிப் போய் கிடக்கின்றது. எத்தனையோ சொற்களை, அவைகள் தமிழ் சொற்களா இல்லையா என்பதை அறிவதே மிகக் கடினமாக இருக்கின்றது. அதே போன்று பல துறைகளில் ஆங்கிலம் போன்ற மொழிகளின் ஆதிக்கம் இருக்கின்றது.

வட்டாரப் பேச்சு வழக்கு மொழிகளாக இருந்தவை தனி மொழிகளாக பிரிந்து போனதையும் தமிழ் மொழி சந்தித்திருக்கின்றது. இன்றைக்கு தமிழ் கொண்டிருக்கும் நூற்றுக் கணக்கான வட்டார மொழிகள் நாளை தனி மொழிகளாக மாறி விடாது என்று உறுதியாக நம்புவதற்கு போதுமான காரணங்கள் இல்லை. "பொதுவான தமிழ்" இன்றைக்கு எழுத்தில் மட்டும்தான் இருக்கின்றது. ஆனால் "வட்டார மொழி இலக்கியங்கள்" என்ற பெயரில் வருகின்ற அதிகரித்த படைப்புக்கள் இதற்கும் முடிவு கட்டி விடுமோ என்ற அச்சத்தைக் கொடுக்கின்றது.

தமிழ் நாட்டின் சென்னை போன்ற பெரு நகரங்களிலும், புலம் பெயர்ந்த நாடுகளிலும் வாழும் இளந்தலைமுறை தமிழை எவ்வளவு தூரம் பேசுவதற்கும், கற்பதற்கும் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

இன்றைக்கும் தமிழ் மொழி உயிரோடு இருப்பதன் ஒரே ஒரு காரணம், தமிழை பேசுபவர்கள் ஆறு கோடிக்கும் மேற்பட்டவர்களாக இருப்பதுதான்.

ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்றில் முப்பது ஆண்டுகளில் அழியப் போகின்ற மொழிகளில் ஒன்றாக தமிழும் இருப்பதாக செய்தி ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஊடகங்களில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் முப்பது ஆண்டுகளில் எல்லாம் தமிழ் அழிந்து விடாது. முப்பது ஆண்டுகள் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று.

அதே வேளை நீண்ட காலத்திற்கு நாம் இப்படி இறுமாப்போடு இருக்க முடியாது. பேசுபவர்களின் எண்ணிக்கையில் மட்டும் ஒரு மொழியின் இருப்பு தங்கியிருக்க முடியாது. எண்ணிக்கையும் மாறுபடக் கூடிய ஒன்றுதான். மொழி அழிவதற்கு தேவையான மற்றைய காரணிகளும் தமிழில் இருக்கின்றன.

ஆகவே தமிழ் மொழி நீடித்து நிலைக்க வேண்டும் என்ற சிந்தனை ஒவ்வொரு தமிழரின் நெஞ்சிலும் இருந்தால் மட்டும்தான், தமிழ் மொழி நீண்ட காலத்திற்கும் நிலைக்கும். இல்லையென்றால் "அழிந்து போன மொழிகளின் பட்டியலில்" தமிழ் இடம் பெறுவது தவிர்க்க முடியாததாகி விடும்.

மரியா ஸ்மித் ஜோனிஸின் உடலோடு "ஏயக்" மொழியும் புதைக்கப்பட்டுவிட்ட இந்த நாளில் தமிழர்களைப் பார்த்து சொல்லக் கூடிய செய்தி இதுதான்.

http://www.webeelam.com

Monday, January 14, 2008

"சம்பிரதாயம்" என்பதன் பின்னால் ஒளிந்திருக்கும் சாதி வெறி!

சாவு வீட்டில் நடந்த காட்டுமிராண்டித்தனம்" என்ற தலைப்பில் கணவனின் இறுதி நிகழ்வில் மனைவியின் தாலி பலவந்தமாக கழற்றப்பட்ட சம்பவம் பற்றி எழுதியிருந்தோம்.

இந்தச் சம்பவம் எமக்கு அதிர்ச்சியையும் வேதனையையும் தந்திருந்தது. ஆனால் பலருக்கு இது ஒரு சாதரண விடயமாகத்தான் பட்டது. அது மட்டும் அல்ல. தாலி அறுப்புச் சடங்கை ஆதரிக்கவும் செய்தார்கள். இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் சம்பந்தப்பட்ட பெண்ணின் கதறலை நையாண்டி செய்து நகைச்சுவைப் பதிவுகளையும் எழுதினார்கள்.

இவ்வாறான காட்டுமிராண்டித்தனமான சம்பிரதாயங்களை ஆதரித்து, கட்டிக் காப்பாற்றுவதற்கு எமது தமிழ் சமூகம் முனைவதற்கு என்ன காரணம்? கணவனை இழந்து கதறுகின்ற பெண்களை சம்பிரதாயத்தின் பெயரில் சித்திரவதை செய்யும் சடங்குகளை விடமாட்டோம் என்று படித்தவர்கள் கூட அடம்பிடிப்பதற்கு என்ன காரணம்?

இதற்கு மதவெறி ஒரு முக்கிய காரணம். இதனோடு சாதிவெறியும் ஒரு காரணம். சாவுவீட்டில் நடக்கின்ற சம்பிரதாயங்களுக்கும் சாதிக்கும் என்ன சம்பந்தம் என்று சிலர் ஆச்சரியப்படலாம். சம்பந்தம் இருக்கிறது. இதைச் சற்று ஆழமாகப் பார்க்க வேண்டும். அதற்கு முன் அண்மையில் டென்மார்க்கில் நடந்த ஒரு கூத்தைப் பார்ப்போம்.

சில வாரங்களுக்கு முன்பு டென்மார்க்கில் ஒருவர் இறந்து விட்டார். அவருக்கான இறுதி நிகழ்வுகளை நடத்தித் தர ஒரு பார்ப்பனரை அழைத்த போது அவர் மறுத்துவிட்டார். தன்னுடைய சாதிப் பிரிவு அதைச் செய்வது இல்லை என்றும், பார்ப்பனர்களில் உள்ள "சைவஐயர்" என்னும் பிரிவுதான் சாவுவீட்டில் இறுதி நிகழ்வுகளை செய்ய வேண்டும் என்று அவர் சொல்லிவிட்டார். அப்படி செய்யவில்லையென்றால் தான் 31ம் நாள் நிகழ்வுகளை செய்து தரமாட்டேன் என்றும் சொல்லி விட்டார். அவர் ஆலயங்களில் பூசை செய்யும் பிரிவைச் சேர்ந்தவர். இவர்களை ஈழத்தில் "சிவாச்சாரியார்கள்" என்று சொல்வார்கள்.

இறந்தவரின் உறவினர்கள் "சைவஐயரை" தேடி கடைசியில் லண்டனில் ஒருவரைக் கண்டுபிடித்தார்கள். அவர் ஏறக்குறைய 1000 யுரோக்களை கூலியாகக் கேட்டார். அத்துடன் இறுதி நிகழ்வுகளுக்கு தேவையானவை என்று மிக நீளமான பொருட்களின் பட்டியலைக் கொடுத்திருந்தார். எல்லாவற்றிற்கும் சம்மதித்து அவரை லண்டனில் இருந்து வரவழைத்து இறுதி நிகழ்வுகளை செய்தார்கள்.

இனிமேல் இறப்பு ஏதாவது நடந்தால் லண்டனில் இருந்துதான் "சைவஐயரை" அழைக்க வேண்டும் என்பதால், டென்மார்க்கில் உள்ள சில தமிழர்கள் கூடி இதற்காக ஒரு சங்கம் அமைத்துள்ளார்கள். தமிழுக்கு சங்கம் அமைத்த காலம் போய், இன்றைக்கு ஐரோப்பாவில் செத்த வீடு செய்வதற்கு சங்கம் அமைக்கின்ற அளவிற்கு தமிழன் வந்து விட்டான்.

இந்தச் சங்கத்தின் மூலம் தமிழர் கலாச்சாரப்படி இறுதி நிகழ்வுகள் செய்ய என்று சொல்லி டென்மார்க் அரசிடம் பணம் பெற்று, அதன் மூலம் "சைவஐயரால்" ஆகும் செலவை ஈடு செய்வதுதான் அவர்கள் திட்டம்.

இந்தச் சங்கத்தை அமைப்பதற்கான முதலாவது கூட்டம் நடைபெற்ற போது, அதில் கலந்து கொண்ட ஒருவர் இப்படிச் சொன்னார், "நான் ஒரு செத்த வீட்டிற்கு கொள்ளிப் பானை கொத்தினேன், அதன் பிறகு எல்லோரும் என்னைத்தான் கொள்ளிப்பானை கொத்தக் கூப்பிடுகிறார்கள், நாங்கள் என்ன அந்த ஆட்களோ?". இப்படி கோபமாகவும் வருத்தமாகவும் கேட்ட அவர் நிறையப் புரட்சிக் கவிதைகளை எழுதுபவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்தச் சங்கத்தின் நோக்கம் டென்மார்க் அரசிடம் இருந்து பணம் பெறுவது மட்டும் அல்ல. சாதியையும் கட்டிக் காப்பதுதான். தனியாளாக கொள்ளிப் பானை கொத்தினால், அவர்களுடைய சாதி மானம் போய் விடுமாம். சங்கத்தின் பெயரில் கொத்தினால், அது பறவாயில்லையாம்.

சாவு வீட்டிற்கு சைவஐயரை அழைத்து 31ஆம் நாள் நிகழ்விற்கு சிவாச்சாரியர்களை அழைத்து, பார்ப்பன வர்ணத்தில் உள்ள சாதிகளின் இருப்பையும் பிழைப்பையும் காப்பதோடு, வேளாள சாதியினரின் ஆதிக்கத்தின் அடையாளத்தையும் தக்க வைப்பதே இந்த சங்கத்தின் நோக்கம்.

இப்பொழுது மீண்டும் விடயத்திற்கு வருவோம். இந்துத் தமிழர்கள் தமது வாழ்க்கையில் பல நிகழ்வுகளை சந்திக்கின்றார்கள். பிறந்தநாள், பூப்புனிதநீராட்டு விழா, திருமணம் என்று நிறைய நிகழ்வுகளைக் கொண்டாடுகின்றர்கள். ஆனால் ஒரு சாவு நிகழ்வில் வெளிப்படுவது போன்று வேறு எந்த நிகழ்விலும் சாதிகளின் இருப்பு வெளிப்படுத்தப்படுவது இல்லை.

ஒரு சாவின் போது சலவைத் தொழில் செய்யும் சமூகத்தை சேர்ந்தவர்கள் வந்து வெள்ளை கட்டுவார்கள். பறை அடிக்கும் சமூகத்தை சேர்ந்தவர்கள் வந்து பறை அடிப்பார்கள். இறந்தவரின் மகனுக்கு மொட்டை அடிக்கும் வேலையோடு, வேறு சிறு வேலைகள் செய்வதற்கு முடி வெட்டும் சமூகத்தை சேர்ந்தவர்கள் வருவார்கள். பூசை சம்பந்தப்பட்ட வேலைகளை செய்ய "சைவஐயர்" சமூகத்தை சேர்ந்தவர்கள் வருவார்கள். இடுகாட்டில் விறகுகளை வெட்டியான் சமூகத்தை சேர்ந்தவர் அடுக்கி வைப்பார். இத்தனை சாதிகளும் வந்து போன பின்னர் 31ஆம் நாள் "சிவாச்சாரியார்கள்" வருவார்கள்.

இதுதான் இந்து சம்பிரதாயப்படி நடக்கின்ற சாவு ஒன்றின் இறுதி நிகழ்வு. ஒரு சாவு நிகழ்வில் கூட மனிதர்களுக்குள் பல சாதிகள் உண்டு என்பதையும், அவர்களுக்கு என்று தனியான தொழில்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பதையும், அந்தச் சாதிகளில் உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்பன உண்டு என்பதையும் வெளிப்படுத்தும் மனிதத்திற்கு விரோதமான ஒரு சம்பிரதாயமே இந்த இந்து மதச் சம்பிரதாயம் எனப்படுவது.

இங்கே புலம்பெயர்ந்த நாடுகளில் இந்த சம்பிரதாயங்களை அப்படியே நடைமுறைப்படுத்த முடியவில்லை என்பது வேளாள பார்ப்பனிய சாதி வெறியனருக்கு ஒரு குறையாகவே இருக்கின்றது. இதனால் சங்கங்கள் அமைத்து "இந்து சம்பிரதாயம்" என்ற பெயரில் சாதிகளின் இருப்பை முடிந்தவரை தக்க வைக்க முனைகின்றார்கள்.

சாதிகளின் இருப்பை வெளிப்படுத்தும் இந்த நிகழ்வில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்வதற்கும் இந்த சாதி வெறியர்கள் தயாராக இல்லை. மிகவும் உணர்வுபூர்வமானதாக கருதப்படும் தாலி விடயத்தில் மாற்றங்களை கொண்டு வருவதானது, பின்பு மற்றைய விடயங்களிலும் மாற்றங்களை கொண்டுவருவதற்கு ஒரு உந்துகோலாக அமைந்து விடும் என்பதுதான் இவர்களுடைய முக்கிய அச்சம்.

சாம்பல் கரைப்பதற்கு சைவஐயர்கள் வரவேண்டும் என்பதும் 31ஆம் நாள் சிவாச்சாரியார் வரவேண்டும் என்பதும் சம்பரதாயத்தின் பெயரில்தான் நடக்கிறது. தாலியை அணிந்தபடி வந்து பின்பு தாலியை கழற்றி கணவனின் பிணத்தின் மீது வைக்க வேண்டும் என்பதும் சம்பிரதாயத்தின் பெயரில்தான் நடக்கிறது. ஒரு சம்பிரதாயத்தை முற்றிலும் இல்லாமல் செய்வது என்பது மற்றைய சம்பிரதாயங்களையும் காலப் போக்கில் இல்லாமல் செய்து விடக் கூடும். இதனால் சாதிவெறி பிடித்தவர்கள் சம்பிரதாயங்களை மாற்ற மாட்டோம் என்று பிடிவாதமாக நிற்கிறார்கள்.

ஒரு புறம் பெண்கள் மறுமணம் செய்யக் கூடாது என்ற பிற்போக்குச் சிந்தனை, மறுபுறம் இந்தச் சம்பிரதாயங்களை நீக்கி விட்டால் இந்து மதத்தில் வேறு ஒரு மண்ணும் இல்லையே என்ற கவலை, இன்னொரு புறம் சாதிகளின் இருப்பை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்வு அப்படியே பின்பற்றப்பட வேண்டும் என்ற வெறித்தனம், இவைகள் எல்லாம் சேர்ந்துதான் இவர்களை "சம்பிரதாயம்" என்று கூக்குரல் இட வைக்கின்றது. காட்டுமிராண்டித்தனமாக நடக்கச் செய்கிறது.

http://www.webeelam.com

Tuesday, January 08, 2008

சாவு வீட்டில் நடந்த காட்டுமிராண்டித்தனம்!

அண்மையில் ஜேர்மனியில் உள்ள ஒரு நகரத்தில் சாவு ஒன்றின் இறுதி நிகழ்வில் நடந்த சில சம்பவங்கள் பத்திரிகை மற்றும் இணைய ஊடகங்களில் பரபரப்பான விவாதத்திற்கு உள்ளாகியுள்ளன. சாவடைந்தவரின் மனவியிடம் இருந்து தாலியை சிலர் பலவந்தமாக கழற்றியதாக சொல்லப்படுகின்ற சம்பவமே பரபரப்பிற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

அங்கே நடந்த சம்பவங்களை நேரில் பார்த்த ஒரு ஊடகவியலாளர் மிகுந்த வேதனையோடு நடந்தவற்றை விபரித்தார்.

"அந்தப் பெண்ணை மிகவும் மெல்லிய சேலை ஒன்றை உடுத்தி கடும் குளிரில் அழைத்து வந்தார்கள். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணை விரதம் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி அவரைச் சாப்பிடக் கூட விடவில்லை. கணவரை இழந்த சோகத்தாலும், சுற்றத்தாரின் துன்புறுத்தல்களாலும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார். அவரை தாலியைக் கழற்றி கணவரின் உடல் கிடந்த பெட்டியின் மேல் வைக்கும்படி வற்புறுத்தினார்கள். ஆனால் அந்தப் பெண் தாலியைக் கழற்ற மறுத்துவிட்டார். தாலியைக் கழற்றி வைத்தால்தான் கணவரின் ஆத்மா சந்தியடையும் என்று சிலர் அந்தப் பெண்ணைக் கட்டாயப்படுத்தினார்கள். அந்தப் பெண் தாலியைக் கழற்ற மாட்டேன் என்று உறுதியாக நின்றார்.

ஐயோ..எழும்பிப் பாராப்பா....கழட்ட வேண்டாமெண்டு சொல்லப்பா....நானென்ன பாவம் செய்தனான்.....உன்னோட வாழ்த்தானே வெளிநாடு வந்தனான்.....எனக்கேனிந்த நிலை....நான் கழட்டிப் போடுறதுக்காக அவர் எனக்கு இதைக் கட்டயில்லை....நான் போடத்தான் இதைக் கட்டினவர்....நான் கழட்ட மாட்டேன்....என்னை விடுங்கோ....ஐயோ என்னை விடுங்கோ.....ஐயோ கடவுளே ஏனிப்படி ஒரு சம்பிராதயத்தை படைச்சனி.....அவருடைய உருக்கமான கதறல் யாருடைய மனத்தையும் தொடவில்லை. நான் அந்தப் பெண்ணிற்கு ஆதரவாகப் பேசியும் அவர்கள் தாலியைக் கழற்றுவதில் பிடிவாதமாக நின்றார்கள்.

அதன் பிறகு நடந்ததுதான் மிகப் பெரிய கொடுமை. சில பெண்கள் அவரை இறுகப் பிடித்துக் கொள்ள, ஒருவர் அவருடைய தாலியை பலவந்தமாகக் கழற்றினார். அந்தப் பெண் கதறித் துடித்தும் சம்பிராதயம் என்ற பெயரில் இப்படியான ஒரு ஈனச் செயலைப் புரிந்தார்கள்"

அந்த ஊடகவியலாளர் இவைகளை விவரிக்க நாம் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றோம். அந்த சம்பிரதாயக் கொடுமை அத்துடன் முடியவில்லை.

இறந்தவரின் உடலை தகனம் செய்கின்ற அறைக்குள் கொண்டு சென்ற பின்பு அவருடைய உடலை எரிப்பதற்கான மின் அழுத்தியை இறந்தவரின் ஒன்பது வயதை மகனை அழுத்தச் சொன்னார்கள். அந்தச் சிறுவன் தந்தையின் உடலை எரிக்க மாட்டேன் என்று கதறி அழுதான். எரிக்காவிட்டால் அப்பா பேயாக வருவார் என்று பயமுறுத்தி அந்தச் சிறுவனை மின்அழுத்தியை பலவந்தமாக அழுத்தச் செய்தார்கள்.

இந்தச் சம்பவங்களால் அங்கே நின்றிருந்த ஜேர்மனியர்களும், மற்றைய இனத்தவர்களும் மிகவும் அதிர்ச்சி அடைந்து காணப்பட்டார்கள். தம்முடைய நாட்டில் இருந்து கொண்டு சம்பிரதாயம் என்ற பெயரில் மனித உரிமைகள் மீறப்படுவது குறித்து ஜேர்மனியர் ஒருவர் கடும் விசனப்பட்டார். மிகவும் பின்தங்கியுள்ளதாக கருதப்படுகின்ற தங்களுடைய நாடுகளில் கூட இது போன்ற கொடுமைகள் இடம்பெறுவது இல்லை என்று அங்கே நின்ற ஆபிரிக்க நாட்டைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.

பிரச்சனை இத்துடன் முடிந்துவிடவில்லை. எம்மோடு பேசிய அந்த ஊடகவியலாளர் நடந்த சம்பவங்களை ஊடகங்கள் மூலம் வெளிக் கொணர்ந்திருந்தார். இதை அடுத்து அவர் சிலரால் மிரட்டப்பட்டார். மர்ம தொலைபேசி அழைப்புக்கள் மூலம் தொல்லைப்படுத்தப்பட்டார். இதையடுத்து தற்பொழுது இப் பிரச்சனை காவல்துறை வரை சென்றுள்ளது.

நடந்த நிகழ்வுகள் வீடியோவில் படமாக்கப்பட்டுள்ளதால், அனைத்திற்கு ஆதாரம் இருக்கின்றன. தாலி பலவந்தமாக கழற்றப்பட்ட காட்சி அந்த விடியோவில் பதிவாகியிருக்கிறது. வீடியோ தற்பொழுது காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இப் பிரச்சனை மனித உரிமை சார்ந்த சில அமைப்புக்களின் கவனித்திற்கும் போயிருக்கிறது. கணவனை இழந்த பெண்ணின் கழுத்தில் இருந்து தாலியை பலவந்தமாக கழற்றியது, ஒன்பது வயதுச் சிறுவனை தந்தையை எரிப்பதற்கான மின்னழுத்தியை அழுத்தச் செய்தது போன்றவைகள் மிகவும் பாரதூரமான விடயங்கள். இப் பிரச்சனை நீதிமன்றம் செல்லுமிடத்து, இச் செய்கைகளுக்கு தூண்டியவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படக்கூடிய நிலைமையே தற்பொழுது காணப்படுகின்றது.

சம்பிரதாயம் என்று பேசுபவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். தாலி என்பதே தமிழருடையதா என்ற விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. தாலிக்கும் தமிழர் பண்பாட்டிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று பல தமிழறிஞர்கள் ஆதாரங்களை தருகின்றார்கள். தமிழர்களிடம் தாலி இருந்தது என்று வாதிடுபவர்கள் கூட "தாலி ஒரு முக்கியமான புனிதமான ஒன்றாக இருந்தது இல்லை" என்பதை ஒத்துக் கொள்கிறார்கள்.

இந்த நிலையில் தமிழர் பண்பாடு என்று சொல்லிக்கொண்டு இவ்வாறான அத்துமீறல்களை செய்வது முட்டாள்தனமானதும் கண்டிக்கத்தக்கதும் ஆகும்.

இந்து மதச் சம்பிரதாயம் என்று சொல்லி ஒரு காலத்தில் பெண்களை உடன்கட்டை ஏற வைத்தார்கள். உடன்கட்டை ஏறிய பெண்களை "சதி" என்று சொல்லி வழிபடுவும் செய்தார்கள். இந்து மதத்தினுடைய காட்டுமிராண்டித்தனமான இந்தப் பழக்கத்தை பின்பு ஆங்கிலேய அரசு தடை செய்தது.

ஆனால் காட்டுமிராண்டி இந்து மதச் சம்பிரதாயங்களில் மிச்சம் உள்ள சம்பிராதயங்களாகிய "தாலியறுப்புக்கள்" போன்றவை தொடர்கின்றன.

இதை புலம்பெயர்ந்து வந்த தமிழர்கள் செய்வது மாபெரும் வெட்கக்கேடு. முன்னேறிய நாகரீகமான ஒரு இனம் என்று பெருமையாக தன்னை சொல்வதற்கு தமிழினத்திற்கு ஏதாவது அருகதை உண்டா என்று சிந்திக்க வேண்டியிருக்கிறது. பாரதி சொன்னது போன்று பெரும்பாலான தமிழர்கள் "எருமைகளாகவே" இருக்கின்றார்கள் என்பதற்கு மேற்சொன்ன சம்பவம் சான்று.

இச் சம்பவம் ஏதோ ஒரு இடத்தில் ஒரேயொருவருக்கு மட்டும் நடந்துள்ளது என்று இதை அலட்சியப்படுத்த முடியாது. கணவரை இழந்த பெரும்பாலான பெண்களுக்கு இந்தக் கொடுமை எல்லா இடங்களிலும் நடக்கின்றது. கணவரின் இறுதி நிகழ்வில் தாலியைக் கழற்றச் சொல்லி, சம்பிரதாயத்தின் பெயரிலும் மதத்தின் பெயரிலும் பெண்கள் கட்டாயப்படுத்தப்படுவது பல இடங்களில் நடக்கின்றது. பெண்கள் உரிமை என்று வாய் கிழியப் பேசுகின்ற யாரும் இதைப் பற்றி அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை.

தாலி என்பது உலோகப் பொருள் ஒன்றினால் செய்யப்பட்ட ஒரு ஆபரணம். அதற்கு உயிரோ, புனிதமோ, ஒரு மண்ணும் கிடையாது. அதை வைத்துக் கொண்டு இத்தனை அடாவடித்தனம் செய்வது அடி முட்டாள்தனமானது. தாலி என்பதை "அன்புச் சின்னம்" என்று சிலர் சொல்வார்கள். அது உண்மையெனில் கணவன் மீதான அன்பு இருக்கும் வரை அந்த தாலியை அப் பெண் கழற்ற வேண்டிய அவசியம் இல்லை. கழற்ற வேண்டுமா என்பதையும் அப்படி கழற்ற வேண்டுமென்றால் அதை எப்பொழுது கழற்ற வேண்டும் என்பதை தாலியை அணிந்திருக்கும் பெண்தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர, சுற்றியிருப்பவர்கள் அல்ல.

இந்த காட்டுமிராண்டித்தனங்கள் தொடருமாயின் இவைகளை வெளிநாட்டு ஊடகங்களினதும் சட்டத்தினதும் கவனத்திற்கும் கொண்டு செல்வதைத் தவிர வேறு வழி இருக்கப் போவதில்லை.

- நமது நிருபர்கள்

http://www.webeelam.com

Friday, January 04, 2008

புத்தாண்டில் சிங்களத்தின் நடவடிக்கைகள்

2008ஆம் ஆண்டில் தமிழின அழிப்பை தீவிரப்படுத்தவதற்கு சிங்களம் முழு அளவில் தயாராகி வருகின்றது. புத்தாண்டு பிறந்த முதல் நாளில் சிங்கள அடக்குமுறைக்கு எதிரான குரல் ஒன்றை நசுக்கியது. இரண்டாம் நாள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருந்து விலகுகின்ற முடிவை எடுத்தது. மூன்றாம் நாள் அந்த முடிவை உத்தியோகபூர்வமாக நோர்வேக்கு அறிவித்துது.

புத்தாண்டு பிறந்ததை முன்னிட்டு கொழும்பில் உள்ள பொன்னம்பலவாணேஸ்வரர் கோயிலில் வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் சிறிலங்காவின் புலனாய்வுப் பிரிவால் சுட்டுக் கொல்லப்பட்டார். மகேஸ்வரன் கொல்லப்பட்ட செய்தி தமிழ் மக்கள் மத்தில் அதிர்ச்சியையும் கவலையையும் கொடுத்துள்ளது.

மகேஸ்வரன் குறித்த காட்டமான விமர்சனங்கள் பல மட்டங்களில் உண்டு. யுத்தத்தை தனது வர்த்தகத்திற்கு பயன்படுத்தியவர், சிங்களப் பேரினவாதக் கட்சி ஒன்றில் அங்கம் வகித்தவர் போன்றவை மகேஸ்வரன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களில் முக்கியமானவை. ஆயினும் அவர் சிங்களப் அரசினால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்பாலான தமிழ் மக்களை கவலை கொள்ளவே செய்திருக்கிறது.

யாழ் குடா விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து பொழுது, சிறிலங்கா அரசு யாழ் குடா மீது கடும் பொருளாதாரத்தடை விதித்திருந்தது. எரிபொருட்கள் பெறுவது மிக கடினமாக இருந்தது. இந்த நிலையில் யாழ் குடாவிற்கு பல வழிகளில் கொண்டு வரப்பட்ட எரிபொருட்களை மகேஸ்வரன் விற்பனை செய்தார். வர்த்தகத்துறையில் அவருடைய வளர்ச்சிக்கு இதுவே பெரும் காரணமாக இருந்தது.

பொருளாதாரத் தடையை அவர் தன்னுடைய வர்த்தகத்திற்கு பயன்படுத்திக் கொண்டது உண்மைதான். இதைக் குத்திக்காட்டுவதற்கு மகேஸ்வரனின் எதிரிகள் அவரை "மண்ணெண்ணய் மகேஸ்வரன்" என்று அழைப்பதும் உண்டு. ஆனால் தன்னுடைய உயிர் பிரியும் வரை தமிழ் மக்களுக்கு தன்னால் இயன்றதை அவர் செய்தார் என்பதை யாரும் மறுக்க முடியாது.

வர்த்தகத் துறையில் ஏற்பட்ட தொடர்புகள் காரணமாக அவருக்கு ஐக்கிய தேசியக் கட்சியுடன் நெருக்கம் ஏற்பட்டது. 2000ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் யாழ் குடாவில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மீண்டும் 2001ஆம் ஆண்டின் கடைசிப்பகுதியில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் யாழ் குடாவில் போட்டியிட்டு அமைச்சராகவும் ஆனார்.

அப்பொழுது சந்திரிகா அம்மையாரின் கொடுங்கோல் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப் போவதாக அறிவித்திருந்தார். ஆனால் இவைகளை விட மகேஸ்வரனின் வெற்றிகளுக்கு அவருடைய தனிப்பட்ட செல்வாக்கே முக்கிய காரணமாக இருந்தது.

பொருளாதாரத் தடையின் போது மக்களுக்கு அத்தியாவசியமான எரிபொருட்கள் ஓரளவாவது கிடைப்பதற்கு வழி செய்தவர் என்ற வகையில் அவர் யாழ் குடா மக்கள் மத்தியில் மிகவும் அறியப்பட்ட ஒருவராக இருந்தார். அத்துடன் சிறிலங்கா இராணுவத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் கண்டனக் குரலை எழுப்பி வந்திருந்தார். இவைகளே யாழ் குடாவில் மகேஸ்வரனின் வெற்றிக்கு முக்கிய காரணங்களாக இருந்தன.

2004ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் மகேஸ்வரன் யாழ் குடாவில் போட்டியிடவில்லை. தமிழர் தாயகத்தில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற சிந்தனை தமிழீழ மக்கள் மத்தியில் உருவாகியிருந்தது. ஐக்கிய தேசியக் கட்சி போன்ற சிறிலங்காவின் கட்சிகள் தமிழர் தாயகத்தில் வெற்றி பெறக் கூடாது என்ற முடிவில் தமிழீழ மக்கள் இருந்தனர்.

இதனையடுத்து மகேஸ்வரன் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கொழும்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்த போதும், மகேஸ்வரன் ஒரு போதும் தமிழீழ மக்களின் உணர்வுகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தது இல்லை. பாராளமன்றத்தில் தமிழீழத்தை ஆதரித்து முழக்கம் இடுபவர்களில் மகேஸ்வரன் முக்கியமானவர். அவர் சார்ந்திருக்கும் ஐக்கிய தேசிக் கட்சி அவசர காலச் சட்டத்தை ஆதரித்து வாக்களித்தாலும், மகேஸ்வரன் மட்டும் எதிர்த்தே வாக்களிப்பார்.

கொழும்பில் வாழும் தமிம் மக்களுக்கு தன்னால் முடிந்தளவு உதவிகளை செய்து வந்த மகேஸ்வரன் மகிந்தவின் சர்வாதிகார ஆட்சிக்கும், ஒட்டுக் குழுக்களின் அடாவடித்தனங்களுக்கும் எதிரான கண்டனங்களையும் தொடர்ந்து வெளியிட்டார். அண்மையில் தமிழ் மக்கள் பெரும் தொகையில் கைது செய்யப்பட்ட போது, அவர்களை விடுவிப்பதற்கு பலவகையில் மகேஸ்வரன் போராடியிருந்தார். மகிந்த அரசின் அடக்குமுறைகளை சர்வதேச கவனத்திற்கு கொண்டுவருவதில் மகேஸ்வரன் முன்னிலையில் நின்றார்.

கடைசியாக தொலைக்காட்சி ஒன்றில் மகிந்தவின் அடக்குமுறைகள் குறித்தும், யாழ் குடாவில் செயற்படும் ஒட்டுக்குழுக்கள் பற்றியும் அம்பலப்படுத்தியிருந்தார். இந்த நிகழ்விற்கு இரண்டு நாள் கழித்து சிறிலங்கா புலனாய்வுத்துறை உறுப்பினர் ஒருவரால் மகேஸ்வரன் சுட்டுக் கொல்லப்பட்டார். கொலையாளி இனம் காணப்பட்டதை அடுத்து, சிறிலங்காவின் புலனாய்வுத்துறையே இப் படுகொலைக்கு பின்னால் உள்ளது என்பது தெளிவாகி உள்ளது.

மகிந்த ராஜபக்ஸ ஆட்சிக் கட்டிலில் ஏறிய காலத்தில் இருந்து தனக்கு எதிரானவர்களை மிரட்டியும், கொலை செய்தும் இல்லாதொழித்து வருகின்றார்.

ஜோசப் பராரஜசிங்கம், ரவிராஜ், மகேஸ்வரன் போன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை கடத்தியும், மிரட்டியும் பணிய வைக்க மகிந்தவின் அரசு முயன்று வருகின்றது. மனோ கணேசன் போன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் உயிர் தப்புவதற்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர்களும் பெரும்பாலான நாட்களை வெளிநாடுகளிலேயே கழிக்கிறார்கள்.

இவைகளை விட சென்ற ஆண்டில் மிக அதிகளவு ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். மகிந்தவிற்கு எதிரான சிங்கள அரசியல்வாதிகளும் பல வகைகளில் மிரட்டப்படுகின்றார்கள். ராஜபக்ஸ குடும்பத்தின் கொடிய சர்வாதிகார ஆட்சியை நோக்கி இலங்கைத் தீவு வேகமாக சென்று கொண்டிருப்பதையே இது காட்டுகின்றது.

இத்தகைய சர்வாதிகார ஆட்சியை தக்க வைப்பதற்கு யுத்தம் அவசியமானது என்று மகிந்த ராஜபக்ஸ கருதுகின்றார். சிங்களத்தின் அரசியல் என்பது யுத்தத்தை அடிப்படையாகக் கொண்டது. யுத்தம் செய்வதன் மூலம் மாத்திரமே மகிந்தவால் தன்னுடைய கொடிய சர்வாதிகார ஆட்சியை நிலைநாட்ட முடியும்.

தற்பொழுது மகிந்த ராஜபக்ஸ் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டார். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போதே புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்யப் போவதாக சிங்கள மக்களுக்கு மகிந்த வாக்குறுதி அளித்திருந்தார். வரவு செலவு திட்டத்தின் போது ஜேவிபி வாக்களிப்பில் கலந்து கொள்ளது இருப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்வதாகவும், விடுதலைப் புலிகளை தடை செய்வதாகவும் ஜேவிபியிடம் மீண்டும் ஒருமுறை உறுதியளித்திருந்தார்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருந்து விலகியுள்ள மகிந்த அரசு விரைவில் விடுதலைப் புலிகளை தடை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதற்கு 14 நாட்களுக்கு முன்னர் நேர்வேக்கு அது குறித்து அறிவிக்க வேண்டும் என்ற விதி உள்ளது. இதன்படி தமிழர் திருநாளாகிய தைப்பொங்கல் தினத்திற்கு மறுநாள் புரிந்துணர்வு ஒப்பந்தம் சட்டப்படி முடிவுக்கு வருகின்றது. அதற்கு முன்னரோ அல்லது அதற்கு பின்னரோ வன்னி மீது சிறிலங்கா அரசு பெரும் தாக்குதலை நடத்தும் என்று நம்பலாம்.

விடுதலைப் புலிகளை போரில் வென்றுவிடலாம் என்ற நம்பிக்கையே சிறிலங்கா அரசின் இந்த முடிவுக்கு முக்கிய காரணமாகும். கடந்த பத்து மாதங்களாக மன்னார், மணலாறு, முகமாலை போன்ற முனைகளில் முன்னேறுவதற்கு சிறிலங்கா அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த முயற்சிகள் அனைத்தும் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன.

ஆரம்பத்தில் சிறப்புப் பயிற்சி பெற்ற சில நூறு படையினருடன் இந்த நகர்வு முயற்சிகளை மேற்கொண்ட சிறிலங்கா அரசு, அது பலனளிக்காத நிலையில் சில ஆயிரம் படையினரை பயன்படுத்தி முன்னேறும் முயற்சிகளை மேற்கொண்டது. அம் முயற்சிகளும் முறியடிக்கப்பட்டுள்ள நிலையில் பல்லாயிரக் கணக்கான படையினரை பயன்படுத்தி வன்னி மீது பெரும் தாக்குதலை நடத்துவதற்கான ஏற்பாடுகைளை விரைவாக செய்து வருகின்றது.

தமது விசேட படையணிகளை தயார் நிலையில் வைத்திருக்கும் விடுதலைப் புலிகளும் சிறிலங்கா படையின் பெரும் தாக்குதலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். வலிந்து தாக்குதலை மேற்கொள்வதை விட, வன்னிக்குள் நுழையும் சிறிலங்காப் படைகளை சின்னாபின்னப்படுத்துவதே விடுதலைப் புலிகளின் நோக்கமாக இருக்கக்கூடும். அதன் பிறகே விடுதலைப் புலிகளின் வலிந்த தாக்குதல்கள் இடம்பெறலாம்.

எழுத்தில் மட்டும் இருந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை சிறிலங்கா அரசு ரத்து செய்து விட்டது. இது நாள்வரை சமாதானப் பேச்சுவார்த்தைகளை விடுதலைப் புலிகளே குழப்பியதாக சர்வதேசம் குற்றம் சாட்டிவந்தது. ஆனால் இம் முறை நடந்த பேச்சுவார்த்தைகளின் போது விடுதலைப் புலிகளின் அசாத்தியப் பொறுமை சர்வதேசத்தின் குற்றச்சாட்டுக்களை அர்த்தமற்றதாக்கி விட்டது.

பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற காலங்களில் விடுதலைப் புலிகளின் வணிகக் கப்பல்களை சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா அரசு மூழ்கடித்தது. பின் தன்னுடைய ஒட்டுக் குழுக்கள் மூலம் விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்தியது. மாவிலாற்றுப் பிரச்சனை பற்றி பேச்சுவார்த்தை நடத்து கொண்டிருந்த போதே தமிழ் மக்கள் மீது வான்தாக்குதலை நடத்தியது. பின்பு நில ஆக்கிரமிப்புக்களை மேற்கொண்டது. தற்பொழுது எழுத்தில் இருந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் ரத்து செய்துவிட்டது.

சிறிலங்கா அரசு எவ்வாறு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறி, பின் அதை இல்லாமலும் செய்தது என்பது குறித்த பரப்புரைகளை பெரும் எடுப்பில் முன்னெடுக்கவும், சிங்கள அரசின் பெரும் தாக்குதலுக்கு முகம் கொடுக்கவும் உலகத் தமிழினம் தயாராக வேண்டும். வர இருக்கும் போரின் முடிவே சர்வதேசத்தின் தமிழீழம் பற்றிய நிலைப்பாட்டிலும் மாற்றத்தைக் கொண்டு வரும் என்பதை தமிழினம் உணர்ந்து செயற்பட வேண்டும்.

http://www.webeelam.com/