அண்மையில் கனடாவில் நடந்த துடுப்பாட்டப் போட்டியின் போது அங்கு வாழும் தமிழர்கள் சிறிலங்கா அரசுக்கு எதிரான கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். விளையாட்டு மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் குறிப்பிடத்தக்களவு தமிழர்கள் இந்தப் போராட்டத்தை நடத்தினர். “சிறிலங்காவில் இனப்படுகொலையை நிறுத்து” என்ற பதாகையை தாங்கிய வானூர்த்தி ஒன்றும் பறக்கப்பட விடப்பட்டது.
துடுப்பாட்டப் போட்டியைக் காண வந்திருந்த சிங்களவர்கள் தமிழர்களின் இந்தப் போராட்டத்தை கேலி செய்தனர். கைவிரல்களை துப்பாக்கி போன்று மடக்கி, தமிழர்களை சுடுவோம் என்று எச்சரித்தனர். சிலர் நடுவிரலை காட்டினர். ஒரு சில சிங்களவர்கள் வன்முறையில் இறங்க முயன்ற பொழுது கனடாவின் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
இப்படி சிங்களவர்கள் வெளிநாட்டிலும் தமது இனவாதத்தை கைவிடவில்லை என்பதை நிரூபித்தனர். சாதாரண சிங்கள மக்கள் இப்படி தமிழர்களின் கவனயீர்ப்புப் போராட்டத்தினை கேலி செய்து அவமானப்படுத்த முற்பட, மைதானத்திற்குள் தடுப்பாட்டம் செய்து கொண்டிருந்த சிறிலங்காவின் துடுப்பாட்ட வீரர் சனத் ஜெயசூர்யா தமிழர்களை நோக்கி நடுவிரலை உயர்த்திக் காட்டினார்.
விளையாட்டு வீரர்கள் மைதானத்தில் நடந்து கொள்ள வேண்டிய விதிமுறைகள் இருக்கின்றன. விளையாடுபவர்களையோ, பார்வையாளர்களையோ அவமதிக்கும் செயலில் ஒரு விளையாட்டு வீரர் ஈடுபடக் கூடாது. ஆனால் இந்த விதிகளை புறந்தள்ளி விட்டு, சனத் ஜெயசூர்யா தமிழர்களை நோக்கி நடுவிரலைக் காட்டி, தமிழினத்தின் மீதான தன்னுடைய வெறுப்பை வெளிப்படுத்தினார்.
ஆயினும் சனத் ஜெயசூர்யா ஒரு விடயத்தில் கவனமாக நடந்து கொண்டார். தான் நடுவிரலைக் காட்டுவதை நடுவர்கள் யாரும் உணர்ந்து விடக் கூடாது என்பதற்காக தன்னுடைய கையை கன்னத்தோடு வைத்து, ஒரு பக்கவாட்டாக, தமிழர்களுக்கு மட்டும் தெரிவது போன்று நடுவிரலைக் காட்டினார். சில நொடிகளில் நடந்து விட்ட இந்தச் சம்பவத்தை பலர் கவனிக்கவில்லை. ஆனால் தம்மை நோக்கி நடுவிரல் காட்டப்பட்டதை மைதானத்தில் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த தமிழர்கள் கண்டார்கள்.
மைதானத்திற்கு வெளியில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த தமிழர்களை நோக்கி விளையாட்டினை பார்க்க வந்த சிங்களவர்கள் நடுவிரலைக் காட்ட, மைதானத்திற்கு உள்ளே போராட்டம் நடத்திக் கொண்டிருந்தவர்களை நோக்கி சனத் ஜெயசூர்யா நடுவிரலைக் காட்டினார்.
நடுவிரல் காட்டுவது பற்றி சில சுவையான தகவல்கள் இருக்கின்றன......
மிகுதியை வாசிக்க இங்கே வாருங்கள்
No comments:
Post a Comment