Monday, September 10, 2007

என்ன செய்ய??!!

பூக்களை தருவதற்காய்

நான் வந்து கொண்டிருக்கிறேன்

மாட்டுவண்டி ஒன்றிலே

கரடு முரடான பாதையிலே

மெது மெதுவாய் வந்து கொண்டிருக்கிறேன்

கண்ணைப் பறிக்கும்

வண்ணம் கொண்ட

சொகுசுக் காரிலே

எனக்குப் போட்டியாக

அவர்களும் வருகிறார்கள்

வாண வேடிக்கைகள் முழங்க

சுவரெல்லாம் செய்திகள் சொல்ல

ஆடம்பரமாய்

அவர்கள் வருகிறார்கள்

நான் தருவதற்கு

பூக்களை கொண்டு வருகிறேன்

அவர்கள் விற்பதற்கு

மலத்தைக் கொண்டு வருகிறார்கள்

மக்கள் எல்லோரும்

காரை நோக்கியே

கட்டுக்கடங்காமல் ஓடி வருகிறார்கள்

ஓடி வந்து தங்கத் தாம்பாளத்தில்

வைத்து அவர்கள் கொடுத்ததை

சந்தோசமாய் வாங்கிச் செல்கிறார்கள்

என்னையும் பூக்களையும் சீண்டுவார்தான்

யாருமில்லை

நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே

வேறு கார்களும் என்னை முந்திச்

செல்கின்றன

சுற்று முற்றும் பார்க்கிறேன்

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை

பீக்களை மொய்க்கும்

ஈக்களே தெரிகின்றன

இனி இந்தப் பூக்களை

நான் என்ன செய்ய??!!

No comments: