Friday, July 04, 2008

கமலின் பார்ப்பனிய முகம்

தசாவதாரம் - பலராலும் பல விதமாக விமர்சிக்கப்பட்டு விட்டது. என்னுடைய பங்கிற்கும் தசாவதாரம் படத்தைப் பார்த்த பொழுது, பார்த்து முடித்த பின்பு எனக்கு ஏற்பட்ட சிந்தனைகளை பதிவு செய்யலாம் என்று நினைக்கிறேன்.

கமல் மீது எனக்கு எப்போதுமே ஒரு சந்தேகம் உண்டு. தம்மைப் முற்போக்குவாதிகளாக காட்டிக் கொள்கின்ற பார்ப்பனர்கள் ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பின்பு தம்முடைய உண்மையான பார்ப்பனிய முகத்தை காட்டி விட்டுப் போயிருக்கின்ற வரலாற்றுப் பதிவுகள் கமலைப் பார்க்கின்ற பொழுது நினைவிற்கு வந்து தொலைக்கும்.

ஆரம்பத்தில் முற்போக்குச் சிந்தனைகளோடு கதைகளை தந்த சுஜாதா கடைசியில் திரைப்படத்துறைக்குள் காலடி எடுத்து வைத்த பொழுது பார்ப்பனிய சக்திகளுடன்தான் கைகோர்த்துக் கொண்டார். பார்ப்பன சங்கத்தில் முழக்கமிடவும் செய்தார்.

கடவுள் மறுப்புக் கொள்கையுடையவராக தன்னை அறிமுகம் செய்த மணிரத்தினம், பார்ப்பன இந்துத்துவ நலன் சார்ந்த திரைப்படங்களை எடுத்துக் கொண்டிருக்கின்றார். 39 வயதை அடைவதற்குள் இறந்து விட்ட பாரதி கூட ஆங்காங்கே தன்னுடைய பார்ப்பனிய சிந்தனைகளை வெளிப்படுத்தித்தான் இருக்கிறார்.

எம்மவர் என்று கருதப்பட்ட எழுத்தாளர் ஞானியும் தன்னுடைய பார்ப்பனிய முகத்தை வெளிப்படுத்தத் தொடங்கி விட்டாரா என்ற சந்தேகம் வருகின்ற அளவிற்கு அவருடைய இன்றைய எழுத்துக்கள் சில அமைகின்றன.

சுஜாதா போன்றவர்களின் சேர்க்கையால் ஏற்பட்ட விளைவோ தெரியவில்லை, கமலும் தன்னுடைய பார்ப்பனிய முகத்தை மெதுமெதுவாக வெளிப்படுத்தத் தொடங்கியிருப்பதாக அண்மைக் காலமாக நான் சந்தேகப்படுகின்றேன். தசாவதாரம் திரைப்படமும் அந்தச் சந்தேகத்தை வலுப்படுத்தியிருக்கிறது.

கமல் ஒரு சிறந்த கலைஞன் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. தசாவதாரம் படம் மிகவும் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டிருக்கிறது. பல காட்சிகள் தமிழ் சினிமாவிற்கு புதிது. மீண்டும் ஒரு முறை பார்க்கலாம். கமல் கடைசியாக திரைக்கதை அமைத்த சில படங்கள் வெற்றி அடையாத போதும், தசாவதாரத்தின் மூலம் மீண்டும் தன்னை ஒரு சிறந்த திரைக்கதை அமைப்பாளராக கமல் நிரூபித்திருக்கிறார்.

சுனாமி வருகின்ற பொழுது கடற்கரையில் நிற்கின்ற ஜப்பானிய கமல் “சுனாமி மீண்டும் வருகிறது” என்று கத்துவார். ஒரு ஜப்பானியனைத் தவிர வேறு யார் அந்த இடத்தில் நின்றிருந்தாலும் இந்த வசனம் பொருந்தியிருக்காது. டிசம்பர் 2004 வரை தமிழர்கள் இலக்கியங்களில் வருகின்ற கடற்கோள்கள் பற்றி படித்திருக்கிறார்களே தவிர, சுனாமியை கண்டது இல்லை. (சுனாமி வருவதற்கு முன்பே கமல் தன்னுடைய “அன்பே சிவம்” படத்தில் சுனாமி பற்றி பேசியிருப்பார்.) ஜப்பானில்தான் அடிக்கடி சுனாமி வருவது உண்டு. “சுனாமி” என்ற சொல்லே ஜப்பானிய சொல்தான்.

சுனாமி வருவதை சொல்கின்ற ஜப்பானிய கமல் எவ்வித திணிப்பும் இன்றி, படத்தைப் பார்ப்பவர்களுக்கும் எவ்வித நெருடலும் ஏற்படாத வண்ணம் அங்கே வந்து சேர்கிறார். இப்படி படத்தில் வியப்பதற்கு பல விடயங்கள் உண்டு. முக்கியமாக கமலுடைய உடல்மொழியை சொல்ல வேண்டும்.

படத்தில் “மேக்அப்” படுமோசம் என்று படம் பார்த்த எல்லோரும் சொல்லி விட்டார்கள். முகமூடிகளை மாட்டியது போன்று இருக்கிறது. இந்தியன் திரைப்படத்தில் ஏற்பட்ட பிரமிப்பு தசாவதாரத்தில் ஏற்படவில்லை. சிரிப்புத்தான் வந்தது. முகமூடி போட்டது போன்ற “மேக்அப்” காரணமாக முகம் நடிக்க முடியாது போக, தன்னுடைய உடல்மொழி நடிப்பால் அந்தக் குறையை கமல் சமன் செய்கிறார். அமெரிக்க வில்லன், மனநலம் குன்றிய பாட்டி, தலித் தலைவர், ஜப்பானியர் என்று ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஏற்றபடி கமலின் உடல்மொழி அமைகிறது. ஜப்பானிய கமல் சற்றுக் குள்ளமாக தெரிவதன் காரணம் கூட கமலின் நடிப்பே.

தசாவதாரம் படம் பற்றி எழுதுவதை விட கமலின் பார்ப்பனிய முகம் பற்றி எழுதுவதே என்னுடைய நோக்கம் என்பதால், படம் பற்றி எழுதுவதை குறைத்துக் கொண்டு விடயத்திற்கு வருகிறேன்.

கமல் பார்ப்பனிய சிந்தனைக்கு எதிரான ஒருவர் என்பதுதான் பலருடைய கருத்து. பார்ப்பனர்களை மறைமுகமாகச் சாடுகின்ற காட்சிகளை தன்னுடைய படங்களில் அவர் வைத்திருக்கின்றார். தேவர்மகன் படத்தில் கூட இரண்டு சகோதரர்களின் பகையில் வயிறு வளர்க்கின்ற ஒரு பார்ப்பனப் பாத்திரத்தை படைத்திருப்பார். நடிகர் மதன்பாப் செய்த அந்தப் பாத்திரம் இரண்டு சகோதரர்களின் பகையை அதிகரிக்கின்ற கைங்கர்யங்களிலும் ஈடுபடும்.

மகாநதியில் ஒரு பார்ப்பனர் (பூர்ணம் விஸ்வநாதன்) உலகில் நடக்கும் அக்கிரமங்களைக் கண்டும் பகவான் மேல் பாரத்தை போட்டு விட்டு பேசாது இருப்பார். அக்கிரமத்திற்கு எதிராக போராடுகின்ற குணத்தோடு கமல் தோன்றுவார். இப்படி வெளிப்படையாக இல்லையென்றாலும் பார்ப்பனர்களை மறைமுகமாக என்றாலும் தன்னுடைய படங்களில் கமல் தோலுரித்திருக்கிறார்.

ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை. திடீரென்று வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில் பார்ப்பனர்களுக்கு உதவுவதற்கு “நான் இருக்கிறேன்” என்று புஜபலத்தை காட்டியபடி வெளிப்படையாகவே வந்து குதித்தார் கமல்.

தொடரும்….

http://www.webeelam.net

4 comments:

Anonymous said...

எழுதுங்கள் பார்ப்போம்.

தமிழன் said...

எந்த வித சர்ச்சையிலும் சிக்காதவர் கலைஞானி கமல் உங்கள் கட்டுரை முழுமை பெறவில்லை என்றாலும் உங்கள் தலைப்பு நெருஞ்சி முள்ளாக குத்துகிறது. தொடருங்கள் பின்பு உங்கள் கருத்துக்கு பதில் சொல்கிறேன்.

Anonymous said...

//இனவிடுதலையும் பகுத்தறிவும் எம் இரு கண்கள்//

அப்ப நீ என்ன ஒரு குருட்டு கம்மனாட்டியா?

Anonymous said...

சைவ மதத்திலிருந்து காசுக்காக கிறிஸ்தவனாக மாறியவன் கமலைப் பற்றிக் கதைக்க அருகதை இல்லாதவன்.